Wednesday, February 21, 2018

ரீப்பர் கட்டை போலீஸின் கழண்ட ஷூ



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில  இருபத்தி இரண்டாவது பொது மாநாடு  நேற்று தூத்துக்குடியில் நடைபெற்றது. மாநாட்டுப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக செந்தொண்டர்கள் அணி வகுப்பு நடைபெற்றது. ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கட்டுக்கோப்பாக  செங்கடலாக திரண்டது அங்கே இருந்த காக்கி/காவி ஏ.டி.எஸ்.பி நாக.செல்வரத்தினத்திற்கு எரிச்சல் தாங்க முடியவில்லை போல.

தேவையே இல்லாமல் செந்தொண்டர்களோடு வம்பிழுத்து தடியடி நடத்தியுள்ளார். சாதாரண தடியடி இல்லை. அந்த இடத்தில் அவர்கள் தயாராக வைத்திருந்த ரீப்பர் கட்டைகள் கொண்டு  நடத்திய தாக்குதலில் ஒரு சின்னக்குழந்தை உட்பட ஐந்தாறு பேர் கடுமையான காயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் பொங்கி எழுந்த செந்தொண்டர்கள் முன்பு காக்கிகளின் அராஜகம் எடுபடவில்லை. செல்வ. நாகரத்தினம் உட்பட அங்கே இருந்த காக்கிகள் துண்டைக் காணவில்லை, துணியைக் காணவில்லை என்று ஓட்டம் எடுத்துள்ளனர்.

வேகமாய் ஓடி தப்பிக்க வேண்டுமென்பதற்காக ஏ.டி.எஸ்.பி செல்வ.நாகரத்தினம் ஷூக்களை கழட்டி எரிந்து விட்டு ஓடி உள்ளார்.

அந்த ஷூவை பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் அவர் எப்போது வேண்டுமானாலும் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தூத்துக்குடி தோழர்கள் அறிவித்துள்ளனர்.

அவரிடம் தர வேண்டாம்.

அது ஒரு நினைவுச் சின்னம்.

செங்கொடி இயக்கத்தினரோடு மோதினால் அவர்கள் வாங்கிக் கொண்டே இருக்க மாட்டார்கள், எதிர்வினையும் செய்வார்கள் என்பதை காக்கிகளுக்கும் அவர்களைத் தூண்டி விடுகிற எச்.ராசா போன்ற காவிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கிற சின்னம். 

இன்று ஷூவை கழட்டி விட்டு ஓடியவர்கள் மீது நாளை அதுவே ஆயுதமாக பிரயோகிக்கப்படும் என்பதையும் அவர்கள் உணர்ந்து ஒழுங்காக இருக்கட்டும்.


3 comments:

  1. ஏன்னா அடி

    ReplyDelete
  2. summa pesikittey irukkaama avar sattaiya kazattunga thozhar...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அது நடக்கும்

      Delete