Sunday, February 25, 2018

யார்தான் ரசிக்கவில்லை மயிலை!!!!



காதலன் கண் முன்னே மாண்டு போக, அதற்குக் காரணமானவனின் தந்தையை திருமணம் செய்து கொண்டு "போடா கண்ணா போ" என்று அவனை அலட்சியமாக டீல் செய்த அந்த "மூன்று முடிச்சுக்கள்" நாயகியை

சப்பாணியை கோபால கிருஷ்ணனாக மாற்றிய மயிலை

தவறானவனிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க தடுமாறிய "காயத்ரி"  மற்றும் "சிகப்பு ரோஜாக்கள்" கதாநாயகிகளை

குழந்தையின் மன நிலையில் சுப்பிரமணிக்கு பொட்டு வைக்க இங்க் பாட்டிலை உடைத்த "மூன்றாம் பிறை" விஜியை

தாயைக் கொன்ற தந்தையை வெறுப்போடு பார்த்து இறுதியில் பாசத்தை உணர்ந்த "கவரி மான்" மகளை

ஜானியின் "பாடகி"

அடுத்த வாரிசு "இளவரசி"

வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், ப்ரியா, குரு, கல்யாணராமன், மீண்டும் கோகிலா

என்று பல திரைப்படங்களில் நானும்  நீங்களும் ரசித்த ஸ்ரீதேவி
இப்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது. 

ஆம். அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருப்பார்கள் !

அவருக்கு என் அஞ்சலி

என்றென்றும் மனதில் நிற்கும் சில பாடல்கள் அவர் நினைவாக













1 comment:

  1. அருமையான பாடல்கள்...
    வருத்தமான விசயம் தான்
    ஆனால் வருந்த வேண்டிய
    விசயங்கள் நிறையவே இருக்கு.

    ReplyDelete