Tuesday, February 20, 2018

களப் போராளியின் பணி சிறக்கட்டும்



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழ் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அருமைத் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய அராஜகப் பேர்வழிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தது,

சிதம்பரம் நகரையே அச்சுறுத்தி வந்த வாண்டையார் குடும்ப அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது

ஆகியவை அவரது உறுதியைச் சொல்லும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக,

சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளும் நடத்திய போராட்டங்களும் அபாரமானது. 

மூன்றாண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களுக்காக அவர் சுழன்று பணியாற்றியதையும் மெத்தனமாக இருந்த அதிகாரிகளை கடுமையாக சாடியதையும் பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கொண்ட கொள்கைகளில் பாறை போன்ற உறுதியாக இருந்தாலும் இளகிய நெஞ்சம் கொண்டவர் என்பதையும் எங்கள் தோழர் சி.வெங்கடேசன் அவர்களின் மறைவின் போது இரங்கல் கூட்டத்தில் கதறி அழுதார் என்பதையும் நினைவில் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தமிழகத்தில் புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்ல மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பி.கு : மேலே உள்ள படத்தில் கீழே உள்ள படங்கள் சிதம்பரத்தில் நடைபெற்ற எங்கள் கோட்டச்சங்க மாநாட்டின் போது எடுக்கப்பட்டவை.



2 comments:

  1. இதில் இருப்பது ஜெயலலிதாவின் காலை நக்கிட்டு இருந்த தா பாண்டியன் தானே

    ReplyDelete
    Replies
    1. தா.பாண்டியன் யாரு? அவர் எந்த கட்சி?
      இந்தப் பதிவில் யார் பற்றி எழுதியுள்ளது?
      எதுவுமே தெரியாத மர மண்டையெல்லாம் எதுக்கய்யா பின்னூட்டம்
      எழுத வரீங்க?
      கூலிக்கு கமெண்ட் போடற உங்களுக்கெல்லாம் அரசியல்னா என்னன்னு
      தெரியுமா?
      உங்களை மாதிரி முட்டாள்களை வைத்துள்ள கட்சி எதுவோ, அதற்கு என் அனுதாபங்கள்

      Delete