Monday, October 7, 2019

இந்தியர்களை கேணையர்களாக்கும் பதில்



ஜம்மு காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகளான 

வீட்டுக் காவல்,
கைதுகள்,
தொலைபேசி, இணைய வசதி தடைகள்,
ஊரடங்கு உத்தரவுகள்,
கல்வி நிலைய மூடல்கள்,
போக்குவரத்து தடைகள் 

என எதைப்பற்றியும்  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எதுவுமே தெரியாதாம்.

ஆமாம்

தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 

மத்திய உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர் நிலைமைகள் பற்றியோ அங்கு எடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு நடவடிக்கை பற்றியும்

தங்களுக்கு எதுவுமே தெரியாது

என்று பதில் அளித்துள்ளது.

காஷ்மீரில்  எல்லா அயோக்கியத்தனத்தையும் செய்யும் பணி அமித் ஷாவிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வது அந்த அயோக்கியத்தனத்தின் அடுத்த பரிமாணம்.

இந்தியர்கள் அனைவரையும் கேணையர்களாக கருதும் திமிர்.

இப்போதும் அவர்களை ஆதரிக்கும் கேணையர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!


No comments:

Post a Comment