Tuesday, October 22, 2019

ஒரு வெறியனின் ஒப்புதல் வாக்குமூலம்




“ஜெய் ஸ்ரீராம்” எனும் பெயரில் நடைபெறும் கும்பல் படுகொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று 49 ஆளுமைகள் மோடிக்கு கடிதம் எழுதிய காரணத்தினாலேயே அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிறகு திரும்பப் பெறப்பட்டது.

அபாண்டமாக பழி சொல்கிறார்கள், அவதூறு செய்கிறார்கள் என்றெல்லாம் குதித்தார்கள்.

கீழே உள்ளது கல்யாணராமன் எனும் ஆபாச சங்கியின் ட்விட்டர் பதிவு. அதை நானும் என் கண்ணால் பார்த்து உறுதி செய்து கொண்டு ஒரு ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பிறகே இதை எழுதுகிறேன்.



அந்த வாலிபன் உயிர் பயம் காரணமாக இவர்கள் சொன்னதை சொல்லி விட்டு போய் விட்டான்.

மறுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

கும்பல் படுகொலைகளின் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்திருக்கும்.

கட்டைச் சுவரில் அமர்ந்து கொண்டு வெட்டி அரட்டை அடிக்கும் விடலைகள் கூட்டம் போகிறவர்கள், வருபவர்களை வம்புக்கு இழுக்கும். அப்படிப்பட்ட கூட்டத்தை கொலைகாரர்களாக மாற்றி உள்ளதுதான் மோடியின் சாதனை. இதனை மோடி மேஜிக் என்று பெருமையாக வேறு சொல்கிறார்கள்.

இஸ்லாமிய வாலிபனை நாங்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்லச் சொன்னோம் என்று வெளிப்படையாக, ஆணவமாக கூறுகிறவன் மீது அல்லவா தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும்!

மோடியின் சட்டத்தில் அதற்கெல்லாம் இடமில்லை.

ஏனென்றால்

பேயரசின் ஆட்சியிலே  பிண சப்ளையர்கள்தான் பிரமுகர்கள்!

பிகு : இந்த வெறியன் பெருமையோடு இன்னொரு பதிவு போட்டுள்ளான். அது நாளை

No comments:

Post a Comment