Friday, October 4, 2019

பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் பாஜக



பாலியல் வன் கொடுமை நிகழ்த்திய காரணத்தால் வாஜ்பாய் காலத்தில் அமைச்சராக இருந்த சுவாமி சின்மயானந்தா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனிதன் ஒரு கேவலமான ஜந்து என்பதை நிரூபிக்கும் வகையில் சில காணொளிகளும் உலா வந்தது.

குற்றம் சுமத்துபவர் மீது வழக்கு தொடர்ந்து குற்றவாளியை பாதுகாக்கும் யோகிசீ அரசு வழக்கம் போலவே புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண் மீதே "பணம் பறிக்க முயற்சி செய்தார்" என்றொரு வழக்கு போட்டு சிறையில் தள்ளியது.

இப்போது சுவாமி சின்மயானந்தா மீதான வழக்கை திரும்பப் பெறுவது என யோகிசீ அரசு முடிவு எடுத்து காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஊரில் இருக்கும் அத்தனை பாலியல் குற்றவாளியும் பாஜகவில்தான் இருக்கிறார்கள். பாலியல் குற்றவாளிகளை சிறையில் தள்ள ஆரம்பித்தால் இந்தியாவில் சிறை கட்டவே இடம் போதாது.

அதனால்தான் இப்படிப்பட்ட முடிவு போல.

பஞ்சாயத்தில் அட்வான்ஸ் பேமெண்ட் கொடுத்து பாலியல் குற்றம் புரியும் விவேக் படத்து மைனர்கள் போல மொட்டைச் சாமியாரிடம்  தகவல் கொடுத்து விட்டே அயோக்கியத்தனம் செய்வார்கள் போல.

இதிலே மொட்டைச்சாமியாரின் குடுமி ஏதாவது சின்மயானந்தாவிடம் சிக்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

முதலமைச்சராக இருந்தாலும் யோகிசீ யும் ஒரு சாமியார்தானே!

No comments:

Post a Comment