Monday, October 14, 2019

மாலனுக்கு குடுங்கய்யா நோபல் பரிசு







இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து உலக வங்கியின் ஆய்வறிக்கை பற்றிய முந்தைய பதிவை எழுதிய பின்பே

மேஜர் மாலனின் முக நூல் பதிவை பார்த்தேன். 

உலக வங்கியில் உள்ள பொருளாதர நிபுணர்கள் (அவர்கள் ஒன்றும் கம்யூனிஸ்டுகள் அல்ல. உலகமயக் கொள்கைகளின் ஆதரவாளர்கள். இந்திய சந்தை நாசமானால் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபம் குறையும் என்பதுதான் அவர்களின் ஆதங்கம்)  எல்லாம் மேஜர் மாலனின் கூற்றுப் படி 

முகநூல் அறிஞர்கள்.

ரவிசங்கர் பிரசாத் கூறி பிறகு வாபஸ் வாங்கிக் கொண்ட அதே அபத்தமான கருத்தை வாந்தி எடுத்துள்ள இவர்தான் மாபெரும் பொருளாதார மேதை.

எனவே தேச விரோத நிறுவனத்தில் படித்த ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை மகத்தான பொருளாதார அதி மேதாவி மாலனுக்கு தருமாறு நோபல் கமிட்டியை கேட்டுக் கொள்கிறேன்.

அதெப்படி மோடியை ஆதரிப்பவர்கள் எல்லோரும் மூளையை கழட்டி வைத்து விட்டே அலைகிறார்கள்?




No comments:

Post a Comment