Thursday, October 17, 2019

வாழ்ந்துபார் புரியும்!

Image may contain: sky and cloud

குருதி என்பது வெறும் திரவமல்ல உடலின் உயிர்!
சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல
உலகின் உயிர்!
இந்திய மண்ணில் சிவப்பின்
நூற்றாண்டு இது!
என்ன செய்தீர் என்பவற்கு சொல்வோம்
எதை செய்யவில்லையென்று!
எல்லா சிறைகளுக்கும் சென்று பார்
அதுதானே எங்கள் பாசறை!
ஊழலுக்காக ஒரு வழக்கும் இல்லை
உயிரெனக் கொண்ட கொள்கைக்காக!
வீசும் காற்றைக் கேட்டுப்பார் எங்கள்
வீரகாவியத்தை விவரிக்கும்!
வீரத்தெலுங்கானா கையூர் காவியம்
தேபாகா,புன்னப்புரா என நீளும்!
சுந்தரையா,சுர்ஜித்து,ஜோதிபாசு
இ.எம்.எஸ்,பி.டி.ஆரு,ஏ.கே.ஜி!
ராமமூர்த்தி,ஜீவா,சீனிவாசராவ்
எம்.ஆர்.வி,ஏ.பி,நல்லசிவன்!
உமாநாத்,ஜானகியம்மா,பாப்பா,
வி.பி.சிந்தன்,சங்கரய்யா!
சரித்திரம் முழுதும் நிறைந்திருக்கும்
சிவப்பின் அடையாளங்கள்!
காற்று தனக்காக வீசுவதில்லை
பூக்கள் தனக்கென்று மலர்வதில்லை!
மரங்கள் தனக்காக காய்ப்பதில்லை
கனியும் தனக்கென்று கனிவதில்லை!
எங்கள் வாழ்வும் அப்படியே
அது எங்களுக்கானதன்று!
இது என்ன வாழ்கை என்பீர்
வாழ்ந்துபார் புரியும்!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா  இன்று தொடங்குகிறது.

உணர்ச்சியூட்டும் இக்கவிதையை எழுதியவர் 
தோழர் கே.சாமுவேல் ராஜ் 
பொதுச்செயலாளர் ,
தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 

1 comment:

  1. My sincere and honest Red salute to the greatest party,movements and to the lovable leaders and cadres.Tireless struggles n remarkable victories for the mankind.I once again salute.

    ReplyDelete