Wednesday, October 30, 2019

இந்தியாவை அசிங்கப்படுத்தறாங்கய்யா . . .


ஜம்மு காஷ்மீரில் மோடி அரசு நிகழ்த்திய ஜனநாயகப் படுகொலைக்குப் பின்பு இந்திய அரசியல் தலைவர்கள் யாரும் அங்கே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இரண்டு முறை கைது செய்யப்பட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி கூட உச்ச நீதிமன்ற தலையீட்டுக்குப் பின்பே செல்ல முடிந்தது. அப்போது கூட அவரை கிட்டத்தட்ட கைதி போலதான் நடத்தினார்கள்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காஷ்மீரின் கதவுகள், ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இவர்கள் ஐரோப்பிய யூனியனின் அதிகாரபூர்வமான பயணக்குழுவாக இல்லாமல் சொந்த பயணமாகவே வந்துள்ளார்கள்.

அடிமை புத்தியின் வெளிப்பாடு என்றுதான் முதலில் தோன்றியது.

இதுவே இந்தியாவிற்கு மிகப் பெரிய அசிங்கமென்றால் இக்குழுவின் வருகைக்கு பின்னே உள்ள மர்மம் இன்னும் அசிங்கம் . . .

எவ்வளவு கேவலமானவர்கள் மோடி வகையறாக்கள் என்று மனசாட்சி உள்ள மனிதர்கள் நிச்சயம் சிந்திப்பார்கள். 

அப்படி என்ன மர்மம்?

மாலை வரை காத்திருங்கள்.

அது வரை நீரா ராடியா பற்றி பாஜகவினர் என்ன பேசினார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment