Monday, February 24, 2020

உடான்ஸ் புதையலுக்கு இவ்வளவு அளப்பறையா?




இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு புதிய சங்கி, ஒரு வாட்ஸப் குழுவில் ஒரு செய்தியை பரபரப்பாக பகிர்ந்து கொண்டிருந்தார்.

உத்திரபிரதேச மாநிலம் சோன் பத்ரா மாவட்டத்தில் தங்கம் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கே உள்ள தங்கத்தின் அளவு 3,350 டன். அதன் மதிப்பு 12 லட்சம் கோடி ரூபாய்.  இப்போது இந்தியாவில் உள்ள தங்கத்தின் கையிருப்பை விட மூன்று மடங்கு அதிகம் இது. யோகி தங்க வேட்டையாடி விட்டார். ராமருக்கு கோயில் கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டதால் ராமரைத் தேடி லட்சுமியே வந்து விட்டார்.

மூத்த சங்கி குருமூர்த்தியாரோ இனி தங்கத்தின் விலையை உலகச் சந்தையில் நிர்ணயம் செய்யும் சக்தியாகவே திகழும் என்று புளகாங்கிதம் அடைந்து விட்டார்.

மோடி வகையறாக்களின் புளுகு வேலைகளுக்கு எப்போதுமே அல்பாயுசுதான் என்பது இந்த விஷயத்திலும் நிரூபணமாகி விட்டது.

மத்தியரசின் புவியியல் ஆய்வு மையம் யோகியின் தங்க வேட்டையை வெட்டி பந்தா என்று அறிவித்து விட்டது.

சோன் பத்ரா மாவட்டத்தில் ஏற்கனவே பல ஆய்வுகள் நடந்துள்ளது என்று அங்கே கிடைக்க வாய்ப்புள்ள 52,665 டன் தங்கத்தாதுவை பிரித்தெடுத்தால் அதிகாட்சம் 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்றும் 3350 டன் தங்கம் என்பதெல்லாம் தவறான தகவல்  என்று தெரிவித்து சங்கிகள் வாய் திறந்தாகே அதெல்லாம் பொய்தான் என்பதை நிரூபித்து விட்டது.

160 கிலோ தங்கம் கிடைக்கும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். முப்பத்தி மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் கிலோவிற்கும் 160 கிலோ என்பதற்கும் வித்தியாசம் உள்ளதல்லவா?

ஒரு  படத்தில் கவுண்டமணியின் வலையில் திமிங்கலம் சிக்கியிருப்பதாக நினைத்து “திமிங்கலத்தில் பல், தோல் எல்லாம் மருந்து, அதனால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று கற்பனைக் கோட்டை கட்டுவார்கள். ஆனால் வலையில் சிக்கியது என்னவோ அவரது முறைப் பெண் கோவை சரளாவின் காதலனான செந்தில்.

அது போன்ற காமெடியாகி விட்டது யோகியின் தங்க வேட்டை.

உண்மை தெரிவதற்கு முன்பாக

“ராமரைத் தேடி லட்சுமி வந்து விட்டார்”
“தங்கத்தின் விலையை முடிவு செய்யும் கட்டுப்பாடு இந்தியாவிற்கு வந்து விடும்”

என்று கதை கட்டிய சங்கிகள் யாரும் இப்படி தவறான தகவலை பரப்பி விட்டோமே என்று  அசிங்கப்பட்டு வருத்தமோ, மன்னிப்போ தெரிவிக்க மாட்டார்கள்.

ஏனென்றால் பொய் பேசுவதும் வதந்திகளை பரப்புவதும்தான் அவர்களின் தொழில். வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருப்பவர்கள் எப்படி சங்கியாக இருக்க முடியும்!


2 comments:

  1. As long as communists become idiots, capitalists may enjoy. Actually it is 3350 tons gold but it will not disclose to the people by diverting the issue. The whole gold will be shared by BJP party leaders. KGF film is the real story of சோன் பத்ரா!!!!!

    ReplyDelete
    Replies
    1. சொல்ல நினைக்கறதை புரியும் படி சொல்லுங்க

      Delete