Wednesday, February 19, 2020

அம்மையாரின் ஆல் ரவுண்ட் அட்டாக்

மத்திய பட்ஜெட் குறித்த முழு அலசலை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் செய்துள்ளார். தீக்கதிர் நாளிதழில் இன்று வெளியான கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவசியம் முழுமையாக படிக்கவும்


மத்திய பட்ஜெட்: ஓர் ஆல் ரவுண்ட் அட்டாக் - க.சுவாமிநாதன்


முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளிலுமே வருமான மறு பங்கீட்டின் மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செய்வது நடந்தேறும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே வித்தியாசம்,  அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றி இருப்பதுதான். ஒரு ஆல் ரவுண்ட் அட்டாக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சமூகத்தின் உழைப்பாளி மக்களின் எந்தப் பிரிவினரும் அதன் குறியில் இருந்து தப்பவில்லை. மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள்.  சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவற்றில் ஒன்றாகும். செல்வம் சம்பந்தப்பட்டது என்பதால் லட்சுமி பற்றி பேசியிருந்தால் கூட, அதில் நமக்கு வேறுபட்ட கருத்து இருப்பினும் கூட, ஏதோ ஒரு லாஜிக் இருந்திருக்கும். எப்படிப் பேசுவார்கள்! லட்சுமியை பற்றிப் பேசுகிற நிலைமை இல்லையே. ஆகவே சரஸ்வதியை பேசி திசை திருப்பியுள்ளார்கள்.
டிங்கரிங்

டிங்கரிங் என்றால் பூச்சு வேலை. பட்ஜெட் கணக்கு களில் அந்த பூச்சு வேலையை நிதியமைச்சர் செய்தாலும் உண்மை நிலவரம் பல்லிளித்து சிரிப்பதை மறைக்க முடியவில்லை. மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ.24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளி யிடப்பட்ட திருத்திய மதிப்பீட்டின் அளவு ரூ.21,63,423 கோடி கள் ஆகும். அதாவது பள்ளம் ரூ.2,97,772 கோடிகள். இவ்வ ளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 - 21 பட்ஜெட்டில் ரூ.24,23,000 கோடி எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றா? மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ.6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ.7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியமா? பட்ஜெட் செலவினங்களைப் பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீட்டிற்குமான இடைவெளியாக ரூ.88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ.30.42 லட்சம் கோடி களாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமா? ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு (BE), திருத்திய மதிப்பீடு(RE), உண்மை மதிப்பீடு (AE) என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டு கள் கூட ஆகிவிடுகின்றன) எதற்காக இவ்வளவு பூச்சு வேலைகள்? இந்த பட் ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைக ளுக்காகவும் டிங்கரிங் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதாரப் பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வைத் தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக “கரெக்ட்” ஆக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. 0.5 அளவிற்கே விலகல் இருப்பது போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட் டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட் டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.
மிஸ் ஆன கிசான் ரயில்

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளைத் தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை. அரசு விவசாய கொள்முதலை கைவிடுவதை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2019-20-இல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடி களாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை குறைத்துக் காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறை வாக இருக்கும். இந்திய உணவுக் கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப் பாதுகாப்பை சிதைக்கும். அரசு கொள்முதலை பாதிக்கும். அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்ப தால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு உள்ளா கும்.

இந்த லட்சணத்தில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்? ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது  மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடு பொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித் துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ.80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ. 79,997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ.71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா? மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20ல் ரூ.71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகை யான ரூ.61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
தீம் சாங்கும், சோகப்பாட்டும்

“ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றா லும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்க ளுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான அறிவிப்போ, ஒதுக்கீடோ குறிப்பிடத் தக்க அளவு ஒன்றுமில்லை. உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் அமெரிக்காவை சீனா விஞ்சியுள்ளது. அதன் ஹூவாய் நிறுவனம் காப்புரிமை விண்ணப்பத்தில் உலகில் முதல் இடத்தில் உள்ளது என்பதையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமா னது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தி லேயே பிரதிபலிப்பதை மருந்துகள் உற்பத்தியில் காண முடிகிறது.

தேசமே நலமா?

தேசிய உடல் நலக் கொள்கை ரூ.1.12 லட்சம் கோடி கள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ,65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவமனை களே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிகமயம் ஆகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செல விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ் தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு. இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவை யும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.         
                                                                              
   இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவை யான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செய்கிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின் றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தி யுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்தி ரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

வெற்று முழக்கம்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்க ளுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. “மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர் கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. இதோ இன்னொரு உதாரணம். மின்னணு உற்பத்தியிலும் மருந்து உற்பத்தி போன்ற நிலைமையே. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள் ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடை பெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் (Value addition) 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்கு மதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சத வீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது? புதுப் புது முழக்கங்கள் பிறக்கும் போது பழைய முழக்கங்கள் சத்த மில்லாமல் மூச்சை விட்டு விடுகின்றன.

இல்லை பெருக்கல் விளைவு

பெருக்கல் விளைவு (Multiplier effect) என்பது பொருளாதாரத்தில் சாமானிய, நடுத்தர மக்கள் கைகளில் பணம் புழங்குவது ஆகும். இது சந்தையில் கிராக்கி- உற்பத்தி தூண்டுதல்- வேலை வாய்ப்பு- கூலி- கிராக்கி என்கிற பெருக்கல் விளைவை உருவாக்கும். இதற்கு பட்ஜெட் என்ன செய்துள்ளது? கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது. பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் நலன், குழந்தை கள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கள் போதுமானதல்ல. மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர் மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ.71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ.61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப் பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திரப் பிரதே சத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மாற்றமும் ஏமாற்றமும்

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப் பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதலாவது, ஏற்கெனவே உள்ள வருமான வரி கழிவு களை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்க ளின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும். 

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவு கள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவூதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளா தாரத்தில் ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment