Saturday, February 15, 2020

பாட்சா எங்கய்யா போயிட்டாரு?


டெல்லி காவல்துறையின் அராஜகத்திற்கு நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் என்பதை தமிழக ஏவல்துறையினர் நிரூபித்து வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் தடியடி நடத்தி ஒரு முதியவரை கொலை செய்து விட்டார்கள். தமிழகம் எங்கும் போராட்டம் தீவிரமாக காரணமாகியுள்ளது காவல்துறையின் அடக்குமுறை.

இப்படியெல்லாம் செய்து மோடியின் விசுவாசிகள் தாங்கள்தான் என்று காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது எடுபிடி அரசு.

ஏவல்துறையின் அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த காவல்துறை அதிகாரியை தாக்கியதால் தடியடி என்று வதந்தி பரப்பினார் எச்.ராசா. ராசாவை மிஞ்ச வேண்டும் என்பதற்காக சென்னை ஆணையரே தாக்கப் பட்டார் என்று அடுத்த கட்டத்திற்கு போனார் திருப்பதி நாராயணன். வாங்கிக் கொண்டிருக்கும் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக ஆமாம் போட்டார் மூமூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன்.

இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கே நான் இருப்பேன் என்று சில நாட்களுக்கு முன்பாக வஜனம் பேசினார் பாட்சா அலையஸ் மாணிக்கம் அலையஸ் ரஜினிகாந்த்.

இதோ ஒரு இஸ்லாமிய முதியவர் காவல்துறை தடியடியில் இறந்தே போய் விட்டார்.

அன்வர் பாட்சா கொல்லப்பட்டதற்காக மாணிக் பாட்சாவாக மாறியவர்தான் எங்கே என்று தெரியவில்லை.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் என்ன வஜனம் பேசிக்கொண்டு இருக்கிறாரோ?

1 comment:

  1. Dummy piece rajini ennaiku sonthamaa yosichu paesi irukkuthu. Evanavathu ezhudhi koduthatha appadiyae thiruppi paesum.

    ReplyDelete