Saturday, February 22, 2020

சாஸ்த்திரங்களை கொளுத்துங்கள்




இதை எழுத கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. எழுதித்தான் ஆக வேண்டும்.

கடந்த வாரம் மோடியின் குஜராத்திலே ஒரு கேவலமான சம்பவம் நடந்தது.

சுவாமி நாராயன் கோயிலைச் சேர்ந்த ஒரு பள்ளி விடுதியில் மாத விடாய்க் காலத்தில் உள்ள பெண்கள் மற்ற பெண்களோடு சேர்ந்து உணவு உண்ணக் கூடாதாம். ஆனாலும் சில பெண்கள் அந்த விதியை மீறுகிறார்கள் என்ற சந்தேகத்தில்  அறுபது மாணவிகளை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உள்ளாடைகளைக் களைந்து அவர்கள் மாத விடாய்க் காலத்தில் உள்ளார்களா என்று சோதித்துள்ளார்கள்.

வலிமையான கண்டனம் எழுந்த பின்னணியில் அந்த விடுதியின் மேலாளரும் இன்னும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வளவு பிற்போக்குத்தனமான செயலை செய்யும் தைடியம் யார் கொடுத்தது என்று பார்த்தால்

அந்த நிறுவனங்களை நடத்தும் சாமியாரே ஒரு கேடு கெட்டவனாகத்தான் இருக்கிறான்.

மாத விடாய்க் காலத்தில் சமைக்கும் பெண்கள் அடுத்த பிறவியில் நாய்களாகத்தான் பிறப்பார்கள் என்றும் அப்படி சமைக்கப்பட்ட உணவை சாப்பிடும் ஆண்கள் காளைகளாகத்தான் பிறப்பார்கள் என்றும் சொல்லியுள்ளான்  கிருஷ்ணஸ்வரூப்தாஸ் என்ற அந்த மடாதிபதி (மட அதிபதி).

மாத விடாய் என்பது ஒரு இயற்கையான ஒன்று என்பதை புரிந்து கொள்ளாமல் பெண்களை அந்த காலகட்டத்தில் தீட்டு என்று ஒதுக்கி வைப்பது எவ்வளவு கேவலமான சிந்தனை! இவன் ஒரு பெண்ணுக்குப் பிறந்தவன்தானே!

இது நியாயமா என்று கேட்டால் இது ஒன்றும் என் கருத்தில்லை. சாஸ்திரங்கள் சொல்லியுள்ளதைத்தான் நான் சொல்கிறேன், பின் பற்றுகிறேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளான்.

பெண்களை இழிவுபடுத்துகிற சாஸ்திரங்களை கொளுத்திட வேண்டும்.  அந்த நெருப்பு இத்தீயவர்களை பொசுக்கிட வேண்டும்.

No comments:

Post a Comment