Thursday, February 27, 2020

நீதிபதியை ஏன் நீக்கவில்லை?



டெல்லி வன்முறையை தூண்டிய பாஜக ரௌடிகள் மீது வழக்கு பதிய வேண்டும் என்று வலியுறுத்திய, காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

மோடி வகையறா, நீதித்துறைக்கு இரண்டே சாய்ஸ்தான் கொடுத்துள்ளது.

அமித்ஷாவை விடுதலை செய்து ஆளுனர் பதவி பெற்ற சதாசிவம் போலவா?

அமித்ஷாவை விடுவிக்காமல் கொலை செய்யப்பட்ட லோயாவைப் போலவா?

உயிர் பயம் காரணமாக யாரும் லோயாவாக செயல்பட விரும்பவில்லை என்பதுதான் துயரமான யதார்த்தம். தீபக் மிஸ்ரா மீது புகார் சொன்ன ரஞ்சன் கோகாய் எப்படி பின்னாளில் மாறினார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.

அதனால் நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் எந்த வியப்பும் இல்லை.

அவரை பணி நீக்கம் செய்யாமல் விட்டு வைத்ததுதான் வியப்பளிக்கும் செய்தி.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அல்லவா!

No comments:

Post a Comment