Friday, February 14, 2020

மோடிக்கு மானம் போகுமென்ற பயம் . . .


பாவம் டொனால்ட் ட்ரம்ப் . . .

அகமதாபாத்திற்கு அவர் வருவதை ஒட்டி அங்கே உள்ள சேரிகள் அவர் கண்களில் படக்கூடாது என்பதற்காக தடுப்புச்சுவர் கட்டியுள்ளார்கள்.

ட்ரம்ப் என்ன பெரிய அப்பாடக்கரா?
அமெரிக்காவில் சேரிகள் கிடையாதா? ஏழைகள் கிடையாதா?
சேரிகளைப் பார்த்தால் ட்ரம்பின் கண்கள் அவிந்து போய் விடுமா?

என்று பல கேள்விகளை ட்ரம்பை முன் வைத்து பலர் எழுப்பியதைப் பார்த்தேன்.

இக்கேள்விகள் எல்லாம் அவசியமற்றது. ட்ரம்பை முன்னுறுத்துவதும் கூட.

தன் சொந்த மாநிலம் பற்றி ட்ரம்பிடம் மோடி என்னவெல்லாம் கதை விட்டுள்ளாரோ? அந்த கட்டுக்கதைகள் எல்லாம் அம்பலமாகி விடும் என்ற அச்சமா? மானம் போய் விடும் என்ற பயம்தான் தடுப்புச்சுவராக மாறியுள்ளது. 

இப்படி சுவர் கட்டுகிற காசிற்கு தூய்மைப் பணியாவது செய்திருக்கலாம்?




No comments:

Post a Comment