Friday, February 21, 2020

சிவனை இழிவு படுத்துவது ????






காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் என்ற புதிய புகைவண்டியில் பி 5 கோச்சில் 64 வது பெர்த்தை சிவபெருமானுக்காக ரிசர்வ் செய்துள்ளார்கள். அந்த இருக்கையில் சிவபெருமானுக்குப் பதில் அவரது படங்கள் வைத்து வழிபாடு நடக்கிறது. பயணிகள் சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு இந்த ஏற்பாடாம்!

எல்லாம் சரி, ஆனால் ஒதுக்கிய பெர்த் எண்தான் சரியில்லை.

மூன்று நாட்கள் முன்பாக வேறு ஒரு ட்ரெயினில் பி 1 கோச்சில் அதே அறுபத்தி நான்காம் எண் பெர்த்தில்தான் பயணம் செய்தேன்.

டாய்லட்டிற்கு அருகில் உள்ள இருக்கை. ஆகவே இரவு முழுதும் பயணிகள் கதவை திறந்தும் மூடிக்கொண்டும் சென்று கொண்டே இருப்பார்கள். அதனால் தூக்கம் கெடும். மேலும் கழிப்பறை தூய்மையாக இல்லையென்றால் கதவு திறக்கப்படும் போதெல்லாம் நாற்றம் வேறு வந்து தாக்கும் . .

சைட் அப்பர் பெர்த் என்பதால் எதிரில் உள்ள மிடில் மற்றும் அப்பர் பெர்த் காரர்கள் சிவபெருமானை நோக்கித்தான் காலை நீட்டிக் கொண்டு படுப்பார்கள். சிவபெருமானுக்கு இந்த இழிவெல்லாம் தேவையா?

பார்த்துக் கொள்ளுங்கள் பக்த கோடிகளே!

கடவுளை நம்பாத நாத்தீகர்கள் சிவபெருமானை இழிவு படுத்தவில்லை. 
கடவுளின் பெயரால் அரசியல் செய்யும் அசிங்கமான பேர்வழிகள்தான் கடவுளை இழிவு செய்கின்றனர்.


2 comments:

  1. உண்மைதான். சரியா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. சிவனே சிவனேனு இருக்கும் போது...

    ReplyDelete