Saturday, February 29, 2020

கம்பீரமாய் அவர் . .




கடந்த மாதம் பதினேழாம் தேதி நெல்லைக் கோட்டச்சங்கம், நாகர் கோவிலில் "முற்றுகை" நூல் அறிமுகக் கூட்டம் நடத்தி அதற்காக வரச் சொல்லி இருந்தார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை  மாவட்டக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோழர் லெனின் அவர்களின் சிலையை பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தேன். அதனால் நாகர்கோவில் செல்லும் வழியில் கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.





தோழர் லெனினின் சிந்தனை, செயல்பாடு போலவே அவரது சிலையும் கம்பீரமாக இருந்தது.

திரிபுராவிலே அல்பர்களின் ஆட்சி தோழர் லெனினின் சிலையை அப்புறப் படுத்திய அநாகரீகம் நடந்த பின்னணியில் நெல்லையில் அவருக்கு சிலை வைப்பது என்ற முடிவும் கூட கம்பீரமானதுதானே!

No comments:

Post a Comment