Monday, May 16, 2016

தஞ்சையில் மட்டுமேன், தமிழகம் முழுதுமே




அரவக்குறிச்சியினை தொடர்ந்து தஞ்சை தொகுதியிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்டுள்ள  தேர்தல்

தமிழகம் தரம் தாழ்ந்து போய்விட்டதன் அடையாளம்.

ஜனநாயகத்தை அதிமுகவும் திமுகவும் அசிங்கப்படுத்தியுள்ளதன் விளைவு. 

பணம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற துயரத்தின் வெளிப்பாடு.

ஊழல் மூலம் இரு கழகங்களும் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ளது என்பதற்கான சாட்சியம்.

மேலும் மேலும் ஊழல் செய்து வயிறு வளர்க்கும் முதலீடு.

முறைகேடுகளை தடுத்து நிறுத்த முடியாதென்ற தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் வாக்குமூலம்.

அரவக்குறிச்சியிலும் தஞ்சையிலும் மட்டும்தான் அதிமுக, திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததா?

தமிழகம் முழுதும்தான் கொடுத்தது.

ஏதோ மற்ற தொகுதிகளில் எல்லாம் நேர்மையாக இவர்கள் நடந்து கொள்வது போல இரு தொகுதிகளில் மட்டும் ஒத்தி வைத்துள்ளீர்களே, இது பைத்தியக்காரத்தனமாக இல்லையா?

தேர்தல் ஆணையமே,

ஒத்தி வைக்கப்பட்ட  தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் முழுதுமே தேர்தலை ஒத்தி வைத்திடு.

களங்கத்திற்குக் காரணமான கழகங்களை தடை செய்

 

No comments:

Post a Comment