Tuesday, May 3, 2016

மலாலாவிற்கு அருகதை இல்லைதான் டுபாக்கூர் சாமியாரே




பெண்களுக்கு கல்வி வேண்டும் என்று குரல் கொடுத்ததனால் தாலிபன் தீவிரவாதிகளிடம் குண்டடி பட்டு, இன்னும் அக்குரலை வலிமையாக ஒலித்துக் கொண்டிருக்கும் மலாலாவிற்கு நோபல் அமைதிப் பரிசு பெறுவதற்கான அருகதை கிடையாது என்று இந்தியாவின் கார்ப்பரேட் டுபாக்கூர் சாமியார் சீசீசீ ரவிசங்கர் சொல்லியுள்ளார்.

ஆமாம் அருகதை கிடையாதுதான் சாமியாரே!

அந்தப் பெண் என்ன உங்களைப் போல கார்ப்பரேட் கம்பெனிகளில் ஏசி ரூமில் வெண்ணெய் ஒழுக பேசி வசியம் செய்கிறாளா என்ன?

இல்லை முதலாளித்துவ நாடுகள் மத்தியிலும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்காகவும் தரகு வேலை செய்கிறாளா?

இல்லை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக் கொண்டுள்ள பெண்ணா அவள்?

கலாச்சார இழவு என்ற பெயரில் யமுனையை நாசம் செய்தாளா?

ராணுவத்தையே எடுபிடியாக மாற்றினாளா?

மோடி உள்ளிட்ட அரசியல் தலைகள் அவளது கைப்பிடிக்குள் உள்ளதா என்ன?

உங்களைப் போலவே பிற்போக்குத்தனமான, உங்களது பங்காளி தாலிபனுக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணிற்கு எதற்கு நோபல் பரிசு? 

நியாயம்தான் சாமியாரே!

பெண்களுக்கு கல்வி எல்லாம் எதற்கு? பெண்கள் படித்து விட்டால் உங்களைப் போன்ற போலிச்சாமியார்களின் காம லீலைகளுக்கு பலியாக ஆட்கள் கிடைப்பது கஷ்டமல்லவா?

அது சரி,

எனக்கும் நோபல் பரிசு கிடைத்தது, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன். விருதுகள் முக்கியமல்ல. நம் சேவைதான் முக்கியம்னு கதை விட்டுள்ளீர். அதைக்கேட்கையில் வேலாயுதம் படத்து பஜன்லால் சேட்தான் நினைவுக்கு வந்தார். இப்படித்தான் எங்களூரிலும் ஜெயமோகன் என்ற காவிக்கூட்ட எழுத்தாளரும்  சாகித்ய அகாடமி விருது வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று ஒவ்வொரு வருடமும் சொல்வார். 

கீழே உள்ள படத்தைப் பாரும். 



பத்ம விபூஷன் விருதை வாங்குவது நீர்தானே?

விருது அவசியமில்லை என்று வியாக்யானம் பேசும் நீர், என்ன எழவிற்கு இந்த விருதை வாங்குகிறீர்?
 

 

4 comments:

  1. செருப்பால் அடித்ததை நேரில் பார்த்தது போலிருந்தது.

    ReplyDelete
  2. யாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்?
    இவர் தமிழ் நாட்டில் உள்ள பாபநாசத்தைச் சேர்ந்த பார்ப்பனர்,
    திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு ஊரை விட்டு துரத்தியதால் இரவோடு
    இரவாக ஓடிப் போனவர்.இதுதான் இன்று பல்லாயிரக்கணக்கான
    கோடிகளில் சொத்து வைத்துள்ள இந்த மோசடி சாமியாரின் பூர்வாசிரமம்.

    ReplyDelete
  3. It is all true.agree with you.

    ReplyDelete
  4. இந்த மாதிரி ஆசாமிங்களை தூக்கி போட்டு மிதிக்கனும்

    ReplyDelete