Thursday, July 9, 2020

எதை செய்வீர் செங்கோட்டையனாரே?



உலகிலேயே பரிதாபகரமான மனிதர் தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்தான்.

அவருடைய அனைத்து அறிவிப்புக்களுமே சில மணி நேரங்களிலேயே வாபஸ் பெறப்பட்டு அவரை காமெடியானாக்கி விடுகிறது.



உங்களுக்கு உத்தரவு போடுபவர்களே அதை மாற்றச் சொல்கின்றனர் என்றால்

ஒன்று அவர்களை அம்பலப்படுத்துங்கள். கல்வி அமைச்சர் என்ற பொறுப்பிற்கு நியாயம் சேருங்கள்.

அப்படி அம்பலப்படுத்தும் தைரியம் இல்லையென்றால் அப்போதும் ராஜினாமா செய்யுங்கள். இப்படி ஒரு கோழைக்கு பதவி அவசியமில்லை.

இந்த குளறுபடிகள் எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான் என்றால் அப்போதும் ராஜினாமா செய்யுங்கள். இப்படிப்பட்ட குழப்பவாதிகள் மாணவர்களின் கல்வியோடு விளையாடக் கூடாது. 

எதற்கும் ஒரு நல்ல மன நல மருத்துவரையும் பாருங்கள், உங்களுக்கு நல்லது

No comments:

Post a Comment