Tuesday, July 7, 2020

அசிங்கமா போச்சா மாரிதாசு . . .



கீழே உள்ளது முக நூலில் பார்த்த ஒரு செய்தி.  மாரிதாஸ் என்ற சங்கி தன் வீர பிரதாபத்தை சொல்ல அதற்கான எதிர்வினை இது. 

நியூஸ் 18 தொலைக்காட்சியில் ஜீவசகாப்தன் என்பவர் பணிபுரிகிறார். அவரது பின்ணணி பற்றி விசாரிப்போம் என்று காவிப்படை கிளம்புகிறது!

அவர்களது தீவிர துப்பறிதலில் ஜீவசகாப்தன் மனைவி திராவிடர் கழகத்தில் பொறுப்பில் இருக்கும் திருமதி.ஓவியா என்பவரோடு அடிக்கடி வெளியில் ஷாப்பிங், சினிமா, ஹோட்டல் என்று சுற்றுவதைக் கண்டு பிடிக்கிறது!!

இந்த தேச விரோதச் செயலைக் கண்டு பிடித்தக் காவிப்படை இந்தத் தகவலை திரு.மாரிதாஸ் அவர்களிடம் கொண்டு சேர்க்கிறது.

விஷயத்தை "ஆதாரப்பூர்வமாகக்" கேள்விப்பட்ட மாரிதாஸ் "ஒரு செய்தியாளரின் மனைவி தி.க.வில் பொறுப்பில் இருப்பவரோடு எப்படி ஊர் சுற்றலாம்?" என பொங்கிப் பதிவிடுகின்றார்.

இந்தக் காவிப்படை கண்டுபிடிக்காத முக்கியமான ஒரு விசயமும் இதில் இருக்கிறது!!

ஜீவசகாப்தனின் மனைவி ஒரு தி.க பெண்மணியோடு சுற்றுகிறார் அல்லவா!! அந்த தி.க பெண்மணிதான் ஜீவசகாப்த்தனைப் பெற்றெடுத்த தாயார்.. ஜீவசகாப்தனின் மனைவியின் மாமியார்!!

வெளங்கும்டா உங்க இன்வஸ்டிகேஷன்!!!!!

இந்தக் காலத்துல ஒரு மருமக மாமியாரோட ஊர் சுத்துறதுக்கு நியாயமா "பத்மஸ்ரீ" அவார்ட் குடுக்கணும்!! இவனுங்க காவி "ஃபத்வா" குடுக்குறானுங்க!!!!!

தோழர் எட்வின் ஒரு கேள்வி கேட்டிருந்தார். பதிலும் சொன்னார். அது மிகவும் சூப்பர்

ஒரு தொலைக்காட்சியில் ஒருவர் பணியாற்றுகிறார்
அவரது மனைவி தோழர் ஓவியாவோடு சுற்றுகிறார்
நமது தோழர்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு
அவர் ஓவியாவின் மருமகள் இருவரும் சுற்றுவதில் என்ன தவறு என்று விளக்கமளிக்கிறாரகள்
எனக்கென்னன்னா
அதற்கென்ன இப்ப ?
மாமியார் மருமகளே இல்லை என்றே கொள்வோம்
அவர்கள் சுற்றுவதில் என்ன தவறு
ஊடகத்தில் பணியாற்றினால் திகவினரோடு சுற்றக்கூடாதா
மக்குன்னு தெரியும்
இவ்வளவு மக்குன்னு இப்பதான்

சங்கிகள் எப்போதுமே கேடு கெட்ட கேவலமான ஜென்மங்கள் என்பது தெரியும். ஆனால் அவர்களுக்கு வேண்டாதவர்களை பின் தொடர்ந்து உளவு பார்க்கிறார்கள் என்றால் 

நாளை அந்த கயவர்கள்

கொலை செய்யலாம்,
பாலியல் வன் கொடுமை உட்பட
என்ன வேண்டுமானால் செய்யலாம்.

ஏனென்றால் சங்கிகள் அடிப்படையில் கிரிமினல்கள், மோடி, அமித்ஷா என்ற இரு கிரிமினல்களால் வழி நடத்தப்படுபவர்கள். 

அதனால் மாரிதாஸ் போன்ற சில்லறை கிரிமினல்களை சாதாரணமாக விட்டு விடக் கூடாது. 

No comments:

Post a Comment