Friday, July 3, 2020

யானை கொலை. மேனகா எங்கே?




நேற்று மேட்டுப்பாளையத்தில் ஒரு யானை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. தங்கள் விவசாய நிலத்துக்குள் நுழைந்ததால் நிலத்துக்குச் சொந்தக்காரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.



பாலக்காடு மாவட்டத்தில் கொல்லப்பட்ட மேனகா காந்தி மேட்டுப்பாளையம் யானைக்காக பொங்கினாரா என்று அவர் ட்விட்டர் பக்கத்தில் தேடிப்பார்த்தேன். மோடி புகழ் பாடிக்கொண்டிருந்தார். கணவர் சஞ்சய் காந்திக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அவ்வளவுதான்.

பாலக்காடு யானைக்கு பொங்கியவர், மேட்டுப்பாளையம் யானையை கண்டு கொள்ளவே இல்லை.

இவர் மட்டுமல்ல, எச்.ராசா கூட கண்டு கொள்ளவில்லை. அவர் பாஜக காரனை சமூக விரோதியாக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்.


ஆக இவர்களுக்கெல்லாம் பிரச்சினை யானை கொல்லப்பட்டது அல்ல.

யானை இறந்த இடம் கேரளா என்பதால் பாலக்காடு மாவட்டத்தை மலப்புரம் மாவட்டம் என்று மாற்றி சொலலி கேரள அரசுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக கலவரத்தை தூண்டி விடுவது மட்டுமே.




1 comment:

  1. Oru vaelai mettuapaalayathai melapaalayathoda confuse panni, irandhathu Muslim yaanai'nu loosela vuttru paanga.

    ReplyDelete