Friday, July 31, 2020

எடப்பாடி - சாமி = தினமலர் வக்கிரம்




தினமலர் வக்கிரத்திற்கு எடப்பாடியும் பலி



பாலாவின் “அவன் இவன்” படத்தில் ஒரு காட்சியில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்யாவிடம் பெயரைக் கேட்பார். அவர் “கும்பிடறேன் சாமி” என்பார். அவர் பெயரை கேட்க, கேட்க இவரும் மீண்டும்  “கும்பிடறேன் சாமி”  என்றே சொல்வார்.

களைப்பான இன்ஸ்பெக்டர் “போதுண்டா கும்பிட்டது, பெயரைச் சொல்ல” என்று சொல்ல “உங்களை கும்பிட்டதா நினைப்பா? எவ்வளவு நாள்தான் நாங்களே உங்களை சாமி ன்னு கூப்பிடறது, கும்பிடறது? நீங்களும் சொல்லனும்தான் என் பேரை “கும்பிடறேன் சாமி” ன்னு வச்சிருக்கேன் என்பார் ஆர்யா.



இந்த காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்க்க வேண்டும். அப்போதாவது ஆதிக்க வெறியில் அவர் பெயரில் உள்ள சாமியை அகற்றி விட்டு பழனி என்றழைக்கும் தின மலர் மீது கொஞ்சமாவது கோபம் வருகிறதா என்று பார்க்க வேண்டும்.

நீங்கள் என்னத்தான் காவிகளின் சொல் பேச்சு கேட்டு ஆட்சி நடத்தினாலும்  அவர்கள் உங்களை ஒரு போதும் மதிக்கவே மாட்டார்கள் என்பதை எடப்பாடி உணர வேண்டும்.

குருமூர்த்தி Impotent என்று இழிவு படுத்தத் தொடங்கியது இனியும் தொடரும். ஆட்சிக்காக, துட்டுக்காக இவரும் அதை ஏற்றுக் கொள்வார் என்பது யதார்த்தம்.

A 1 காலத்தில் டயருக்கு  கும்பிடு போட்டுக் கொண்டே இருந்தது,   தவழ்ந்து கொண்டே வந்து A 2  காலில் விழுந்து ஆசி வாங்கியது ஆகிய நடவடிக்கைகளால் முதுகெலும்பு காணாமல் போயிருக்கும் போல . . .


1 comment:


  1. முதல்வரின் பெயரை முதல் பக்க செய்தியில் இப்படி போடுவது அடாவடித்தனம், செய்தியை செய்தியாகப் போட வேண்டும் இப்படி கிண்டலடிப்பது முறையல்ல

    ReplyDelete