Monday, July 20, 2020

எப்படி எல்லோரும் மெண்டல்?



சில நாட்கள் முன்பாகத்தான் கோவையில் ஒரு வெறியன் கோயில்கள் முன்பாக பன்றி மாமிசத்தை வீசினான். 

அவன் யார் என்ற செய்தி தெரியும் முன்பாக வானதி, சிப்பு சேகர் ஆகியோர் பொங்கினார்கள்.

அதைச் செய்தவன் மாற்று மதத்தினர் அல்ல என்று தெரிந்ததும் அடங்கிப் போனார்கள். 

அவன் யார், என்ன பின்புலம் என்று விசாரணையை விரிவுபடுத்தாமல், குடும்பப்பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தான் என்று சொல்லி போலீஸ் கதையை முடித்து விட்டது.

இப்போது கோயில்கள் முன்பாக டயர் வைத்து கொளுத்தியவனும் மன உளைச்சலில் இருந்த மெண்டல் என்று போலீஸ் சொல்லி விட்டது. அந்த மெண்டல் எப்படி சேலத்திலிருந்து ஈபாஸ் இல்லாமல் கோவை வந்து பாஜக இருக்கும் பகுதிகளாக பார்த்து கொளுத்தி விட்டு மறுபடியும் பத்திரமாக சேலம் போனான் என்று சொல்ல போலீஸ் தயாராக இல்லை.

அதே போல கோவையில் மூன்று தினங்கள் முன்பாக தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் வீசியவனும் மன நிலை பாதிக்கப்பட்டவனாம்.

அதெப்படி குற்றம் செய்கிற சங்கிகளுக்கெல்லாம் போலீஸ் மெண்டல் சான்றிதழ் அளிக்கிறது?

இல்லை குற்றச்செயல்கள் செய்ய சங்கிகள் மெண்டல்களைத்தான் பயன்படுத்துகிறதா?

1 comment:

  1. ஆக மனநிலை பாதிக்கப்பட்டோரின் கூடாரம்
    பிஜேபி
    என்பது சட்டபூர்வமாக உறுதியாகியிருக்கிறது

    ReplyDelete