Saturday, July 11, 2020

அப்போ கமல், இப்போ சூர்யா




எதிர்காலத்தில் வருவதையெல்லாம் முன் கூட்டியே கணிக்கக் கூடியவர் கமலஹாசன் என்று அவர் ரசிகர்கள் சொல்வார்கள்.

சில உதாரணங்கள் கீழே . . .

நிதி நிறுவன மோசடிகள் நடந்த போது அதைப் பற்றி முன்பே கமல் மகாநதி படத்தில் காண்பித்து விட்டார்.

சுனாமி வந்த போது அன்பே சிவம் படத்திலேயே கமலஹாசன் இதை சொல்லி விட்டார் என்றார்கள்.

ஈராக்கில் ரசாயன ஆயுதம் உள்ளது என்று அமெரிக்கா போர் தொடுத்த வேளையில் தசாவதாரம் படத்தில் கமல் சொன்ன சிந்தடிக் பயோ வெப்பன் இதுதான் என்றார்கள்.

சமீபத்தில் என் மகன் ஒரு தகவலை சொன்னான்.

கமலஹாசன் ரசிகர்களையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற அளவில் சூர்யா ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சூர்யா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்ற ரீதியில் மீம்களாக போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் தெரியுமா? என்று கேட்டான்.

எனக்கு தெரியாததால் அனுப்பச் சொன்னேன்.

அதுவெல்லாம் இப்போ பழசு என்று சொன்னாலும் அனுப்பி விட்டான். அவன் அனுப்பி ஒரு மாதம் கழித்துத்தான் இந்த பதிவே என்பதால் அவை இன்னும் பழசாகி இருக்கலாம்.

என்னைப் போலவே உங்களில் சிலருக்கும் இது தெரியாமல் இருக்கலாம் என்பதனால் பகிர்ந்து கொண்டுள்ளேன்.











வடிவேலு சொன்ன மாதிரி ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்களோ?

நாடோடிகள் மாதிரி நான்கு பேர் கொண்ட குழு இருக்குமோ?

பிகு: ஒரு விடுமுறை நாளன்று அரசியல் பதிவு இல்லாமல் இருக்கலாமா என்று யோசித்தேன். 

எங்க முடியுது?

கேரள அரசின் மீதான அவதூறு
உண்மைகளை புதைக்க போலி எண்கவுண்டர் 
மாரிதாஸ் மறுபடி அசிங்கப்பட்ட படலம் 

என்று மூன்று விஷயங்கள் காத்திருக்கிறதே!


No comments:

Post a Comment