Friday, July 31, 2020

கேரளாவை அச்சுறுத்தும் இரட்டைக் கிருமிகள்



எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் அவர்களின் முக நூல் பக்கத்தில் நேற்று பார்த்தேன்.  கேரளாவின் இன்றைய சூழலை சார்லி சாப்ளினைக் கொண்டு அட்டகாசமாக சொல்லியிருந்தார்கள்


அதை பண்ருட்டி தோழர் ஒரு வாட்ஸப் குழுமத்தில் காலை பகிர்ந்து கொண்டிருந்தார் (முக நூல் மற்றும் யூட்ய்பிலிருந்து காணொளிகளை எப்படி தரவிறக்கம் செய்வது என்று அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்)



காங்கிரஸ் ஏற்கனவே திரிபுராவில் தன் கட்சியையே அப்படியே திரிணாமுல் காங்கிரஸிற்கு தாரை வார்க்க பாஜக ஹோல்சேல் ரேட்டில் வாங்கிக் கொண்டது.

பாஜகவிடம் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பறி கொடுத்தது. ராஜ்ஸ்தானிலும் பறி கொடுக்கப் போகிறது.

கேரளாவிலும் காங்கிரஸ்காரர்கள் சங்கிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அக்கட்சி மேலிடம் அறியுமா? கேரள வயநாடு எம்.பி யையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு போய் விடப் போகிறார்கள்!

1 comment:

  1. இன்றைய நாளில் அறிவார்த்தமான / சிந்திக்கவைக்ககூடிய ஒரு பதிவு. சிறந்த நகைச்சுவையாகவும் எடுத்துக்கொள்ளலாம். சிறப்பு தோழர்

    ReplyDelete