Tuesday, September 3, 2019

உப்பு - துப்பு கெட்ட உபி அரசு


மொட்டைச்சாமியார் ஆட்சியில் மீர்சாபூர் என்ற இடத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவில் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள இணை உணவாக உப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சப்பாத்திக்கு என்று மட்டுமல்ல, அரிசிச் சோறுக்கும் உப்புதான் வழங்கப்படும் என்பது பெற்றோரின் குற்றச்சாட்டு.

இதனை ஒரு பத்திரிக்கையாளர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரவ விட்டு விட்டார்.

மொட்டைச்சாமியார் உடனடியாக நடவடிக்கை எடுத்து விட்டார். 

மதிய உணவுத் திட்டத்தில் காய்கறி எதுவும் போடாமல் உப்பை மட்டுமே வழங்கிய சமையல்காரர் மீதா?

சமையல்காரருக்கு கறிகாய் வாங்கித் தராத பொறுப்பாளர்கள் மீதா?

இந்த கொடுமையை கவனிக்கத் தவறிய அதிகாரிகள் மீதா?

நோ, நோ, நோ

அப்படியெல்லாம் நடக்க அது என்ன மக்களாட்சியா என்ன?

வீடியோ எடுத்த பத்திரிக்கையாளர் மீது கிரிமினல் சதி வழக்கு பதியப்பட்டுள்ளது.

துப்பு கெட்ட ஆட்சியில் வேறென்ன நடக்கும்?


No comments:

Post a Comment