Friday, September 20, 2019

கட்டிபிடி வைத்தியத்தை விட்டு தொலைய்யா!


அய்யா மோடி,

சந்திராயன் விஷயத்தில ஐ.எஸ்.ஆர்.ஓ சிவனுக்கு நீங்கள் நடத்திய "கட்டிப் பிடி வைத்தியம்"  ஹெச்.ராசா மாதிரி உங்க கட்சி முட்டாள்களால்தான் பாராட்டப்பட்டதே தவிர அன்னிக்கும் நீங்க காமெடி பீஸாகத்தான் தெரிஞ்சீங்க.

ஆனா அதே இத்துப் போன உத்தியை காஷ்மீருக்கும் பயன்படுத்த சொல்றீங்களே, சீரியஸாகவே கேட்கிறேன்.

மூளை என்று நிஜமாகவே ஒன்று உங்களுக்கு இருக்கா?

காஷ்மீர் மக்களுக்கு நீங்கள் நிகழ்த்தியது அராஜகம், துரோகம், உரிமை பறிப்பு, அந்தஸ்து குறைப்பு, அத்து மீறல், ஆக்கிரமிப்பு.

அந்த மக்களை நடமாட முடியாமல் முடக்கி விட்டு,
அவர்களை தொடர்பு எல்லைக்கு அப்பால் நிறுத்தி விட்டு
சொந்த மண்ணையே சிறைச்சாலையாக்கி விட்டு

"ஒவ்வொரு காஷ்மீரியையும் கட்டிப் பிடியுங்கள், சொர்க்கத்தை உருவாக்குவோம்"

இப்படியெல்லாம் சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு?

உங்களை இரண்டாவது முறையும் பிரதமராக்கிய அந்த புத்தி கெட்ட மக்களை திட்ட வேண்டும்.

No comments:

Post a Comment