Saturday, September 7, 2019

சந்திராயன் 2 - இன்றில்லாவிட்டால் நாளை . . .


சந்திராயன் 2 - இறுதிக்கட்டத்தில் தொடர்பு எல்லைக்கு அப்பால் போனது வருத்தமளிக்கிறது.

அறிவியல் சோதனைகளில் இதெல்லாம் சகஜம்தான்.

விண்வெளித்துறையில் இந்தியா இன்று வலிமையான இடத்தில் இருக்கிறது. ஆனால் எத்தனை எத்தனை தோல்விகளை இதற்கு முன்பாக சந்தித்துள்ளது.

இப்போது ஐ.எஸ்.ஆர்.ஓ புகழ் பாடும் பத்திரிக்கைகளே "கடலில் விழுந்த ராக்கெட்" என்றெல்லாம் தலைப்புச் செய்தி வெளியிட்டு கிண்டல் செய்தவர்களே!

ஆயிரக்கணகான அறிவியலாளர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் கடும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தைத் தவிர வருத்தத்திற்கோ, சோர்வுக்கோ இடமில்லை.

இன்று கிடைக்காத வெற்றி நாளை நிச்சயம் கிடைக்கும்.

நம்பிக்கையோடு காத்திருப்போம் . . .

No comments:

Post a Comment