Monday, September 23, 2019

மோடியின் காதில் நாராசமாய் . . .



மோடியின் புகழ் பரப்பவும் டொனால்ட் ட்ரம்பின் புகழ் வளர்க்கவும் இருவரின் அரசியல் ஆதாயங்களுக்காக "ஹௌடி மோடி" என்றதொரு நாடக விழா நேற்று அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது.

"மோடியே திரும்பிப் போ" என்ற ஆர்ப்பாட்டமும் அரங்கிற்கு வெளியே அமெரிக்க வாழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது.

மோடியும் ட்ரம்பும் "கட்டிப் பிடி" காட்சிகளெல்லாம் நடித்தார்கள் என்றாலும் அந்த நிகழ்வில் மோடி மனதுக்குள் வெறுப்போடுதான் இருந்திருப்பார்.

காரணம்?

ஸ்டீனி ஹோயர்.

யார் இவர்?

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவர். செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தலைவர்.

அவர்தான் நிகழ்ச்சியில் முதலில் பேசியவர்.

மகாத்மா காந்தியை புகழ்ந்தது மட்டுமல்ல


"ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் மட்டும்தான் பன்முகத்தன்மைக்கு மதிப்பிருக்கும். அனைவருடைய மனித உரிமைகளை பாதுகாக்க முடியும். அப்படி ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இந்தியாவை உருவாக்கிய பண்டித நேருவின் தீர்க்கதரிசனம் போற்றுதலுக்குரியது"

என்று நேருவை வேறு புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதுவும் அதற்கான காரணங்கள் வேறு மோடிக்கு வேப்பங்காயாக கசக்கக் கூடியது.

அரங்கிற்கு வெளியே எழுப்பப்பட்ட முழக்கங்களை விட ஸ்டீனி ஹோயர் கூறியதுதான் மோடியில் காதில் நாராசமாய் ஒலித்திருக்கும். 

No comments:

Post a Comment