Tuesday, October 1, 2024

லட்டு பஞ்சாயத்து ஓவர். அடுத்து

 


உச்ச நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவை கழுவி கழுவி ஊற்றியுள்ளது.

"லட்டு பிரசாதத்தில் கலப்படம் நேர்ந்துள்ளதாக செப்டம்பர் மாதம் 25 ம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 26 ம் தேதிதான் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாக சந்திராபாபு நாயுடு செப்டம்பர் 18 ம் தேதியே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிக்கை வெளியிடுகிறார், அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. இது வரை வெளி வந்துள்ள எந்த ஆவணங்களிலும் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட லட்டு பிரசாதம், கலப்பட நெய்யால் செய்யப்பட்டதா என்பதற்கும் எந்த தகவலும் இல்லை. 

ஒரு அரசியல் சாசனப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர், கோடி பேருடைய உணர்வுகளை பாதிக்கும் விஷயத்தில் பொறுப்பில்லாமல் செயல்படக் கூடாது.

உங்கள் அரசியலில் இருந்து கடவுளை தள்ளி வையுங்கள்"

இதுதான் நீதிபதிகள் சொன்னது. லட்டு பிரசாதம் கெட்டுப் போனதாக சில வி.ஐ.பி க்கள் தெரிவித்துள்ளார்கள் என்று வக்கீல் சொன்ன போது, அந்த லட்டுக்கள் சோதிக்கப்பட்டதா என்று நீதிபதி கேட்ட போது பதில் சொல்லவில்லை.

கீழ்த்தரமான அரசியல் ஆதாயத்திற்காக லட்டு பிரச்சினையை சந்திரபாபு நாயுடு கையிலெடுத்துள்ளார் என்று முன்பே எழுதினேன். அவருடைய ஹெரிட்டேஜ் நிறுவனத்திற்கு நெய் ஒப்பந்தம் வேண்டும் என்பதும் கூட ஒரு காரணம்.

இதிலே பவன் கல்யாணின் கோமாளிக் கூத்துகள் வேறு. 

சங்கிகளுக்குத்தான் ஏமாற்றமாக இருக்கும். லட்டை வைத்து நடத்த நினைத்த கலவரங்களுக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

அதனால் என்ன?

அடுத்த பொய்ப்பிரச்சாரத்துக்கு தயாராகி விடுவார்கள். . . .

No comments:

Post a Comment