Thursday, October 3, 2024

இஸ்ரேல் தெனாவட்டு ஏன்?

இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த புகைப்படம் . . . 



இஸ்ரேலின் அராஜகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

பாலஸ்தீனத்தை கிட்டத்தட்ட அழித்து விட்டது.

லெபனானின் மீது வெறித் தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறது.

பாலஸ்தீன, லெபனான் இயக்கத் தலைவர்களை இரான் மண்ணில் தாக்கி இரான் மண்ணை போர் வலையில் இழுத்து விட்டது.

அதற்கான எதிர்வினையை இரான் செய்கிற போது அதை காரணமாகக் கொண்டு இரானையும் அழிக்கப்பார்க்கிறது.

"லெபனானின் இஸ்லாமியக் குடியரசு நாட்டிற்குள் நுழைய முடியாத பகுதி என்று இஸ்ரேலுக்கு எதுவுமே கிடையாது" 

என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ ஆணவமாகச் சொல்கிறார்.

இந்த ஆணவம் எங்கிருந்து வருகிறேன்.

மேலே உள்ள புகைப்படம் ஒரு சோற்றுப் பதம்.

இரான் அனுப்பிய ஏவுகணையின் மீது இஸ்ரேலியர்கள் நின்று கொண்டு அதை ஏதோ ஒரு காமெடி பொருள் போல நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் முக பாவனையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

போர் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியோ ***அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பெரிதாக தெரியாது. ஏனென்றால் அவர்கள் தாக்குபவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. 

அழிவைப் பார்த்திருந்தால் இஸ்ரேல் மக்கள் போருக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாததால் இப்படி தெனாவெட்டாகத்தான் போஸ் கொடுப்பார்கள். 

பிகு:   ***  இரண்டாவது உலகப் போரின் போது பியர்ல் ஹார்பர் தாக்குதல், செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் தவிர அமெரிக்கா அதன் வரலாற்றில் எந்த தாக்குதலையும் சந்தித்ததே இல்லை. 

No comments:

Post a Comment