Monday, September 2, 2024

அடிக்கத் தூண்டுதா ஆட்டுத்தாடி?


தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு சில வாரங்கள் அடக்கி வாசித்த ஆட்டுத்தாடி ஆரெஸெஸ்.ரெவி மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டது. தமிழ்நாட்டின் மாநில கல்வித்திட்டம் மோசமாக இருப்பதாகவும் அதனால்தான் தமிழ்நாட்டு மாணவர்கள் போட்டித் தேர்வுகளில்  வெற்றி பெற முடிவதில்லை என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தை துவக்கியுள்ளது ஆட்டுத்தாடி.

நீட், சிவில் சர்வீஸஸ் போன்ற பல போட்டித் தேர்வுகளில் வேறு மாநில மாணவர்கள் அதிக வெற்றி பெறுவதற்கு காரணம் அவர்கள் படிக்கும் கல்வித் திட்டம் கிடையாது. பயிற்சி மையங்கள் புரோக்கர்களாக மாறி முறைகேடான வழிகளில் தங்களுக்கு பணம் கொடுத்தவர்களை வெற்றி பெற வைக்கிறார்கள் என்ற அசிங்கமான உண்மை அம்பலப்பட்ட பின்பும் இந்த ஜந்து இப்படி பேசுகிறது.

இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனகள் பட்டியலில் கிட்டத்தட்ட 35 % கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. கட்டமைப்பு வசதிகளால் அவை பெயர் பெறவில்லை. அங்கே பயின்ற மாணவர்களின் சாதனைகளால் பேசப் படுகின்றன. அந்த நிறுவனங்களில் பயின்று சாதிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டின் மாநில கல்வித் திட்டத்தில் பயின்றவர்கள்தான்.

இருப்பினும் ஏன் அது இப்படி பேசுகிறது?

தமிழ்நாட்டை மட்டம் தட்டும் இழி குணமும் தமிழ்நாட்டு மாணவர்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதும் அதன் முக்கிய நோக்கமாகும்.

இன்னொரு காரணமும் இருக்கிறது.

“இந்த பஞ்சாயத்தில ஒரு கொலை விழனும்னே அவன் இப்படி பேசறான்” என்று தேவர் மகனில் நடிகர் திலகம் சொல்வது போல, இப்படியே பேசிக் கொண்டிருந்தால் தமிழ்நாட்டு மக்கள் கடுப்பாகி அந்தாளை அடித்து விடுவார்கள், அதை வைத்து அரசியல் செய்யலாம் என்பது அந்த ஜந்துவின் உள் நோக்கம்.

ஆனால் அந்த அளவிற்கு நீ வொர்த்தில்லை ரெவி.


No comments:

Post a Comment