Sunday, September 22, 2024

ஒரு லட்டு, எத்தனை "அம்மா"?

 


திருப்பதி லட்டு சர்ச்சை ஓடிக் கொண்டிருந்தது. சந்திரபாபு நாயுடு சொன்ன குற்றச்சாட்டு உண்மையா என்பது ஆய்வு செய்யப்பட்டு தவறு நடந்திருந்தால் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றச்சாட்டு பொய்யென்றால் சந்திரபாபு நாயுடு பதவி விலக வேண்டும்.

லட்டு பிரச்சினையை சங்கிகள் மாற்று மததவர்கள் மீது புழுதி வாரி தூற்றவும், கோயில்களில் முறைகேடுகள் செய்யும் உரிமைகள் தங்களுக்கே வேண்டும் என்பதற்காகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

இதனை அரசியல் ஆதாயத்திற்காகவே சங்கிகள் பயன்படுத்துகின்றனர். மண்டையை மறைத்தாலும் கொண்டையை மறைக்காத முட்டாள்கள், அதனை அவ்வப்போது நிரூபித்து விடுகிறார்கள்.

கீழேயுள்ளது பல சங்கிகள் போட்ட ட்விட்டர் பதிவுகள்.



அதெப்படி அத்தனை பேரின் அம்மாக்களுக்கும் இரண்டு வருடமாகவே திருப்பதி லட்டு சாப்பிட்டால் உடம்பு சரியில்லாமல் போகிறது? அதெப்படி எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி சுகாதாரத்தில் கருத்தாக நூறு ஆலோசனைகள் சொல்பவர்களாக இருக்கிறார்கள்?

ஏண்டா சொல்ற கதையை கொஞ்சம் கூட மாத்த மாட்டீங்களா?

அப்படியே ஈயடிச்சான் காப்பி. இதுதான் டூல்கிட்டா மோடி?

என்ன வழக்கமா சச்சின் டெண்டுல்கர், பி.வி.சிந்து, கௌதம் கம்பீர் போன்றவர்களை ட்வீட் போட வைப்பார்கள். அவர்கள் அதிர்ஷ்டவசமாக இப்போது தப்பியுள்ளார்கள். 



No comments:

Post a Comment