Thursday, September 12, 2024

செவ்வணக்கம் தோழர் சீத்தாராம் யெச்சூரி

 


உலக கம்யூனிஸ இயக்கங்களுக்கே இன்று ஒரு துயரமான நாள்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி இன்று மறைந்தார்.

மிகவும் இளைய வயதில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரானவர் அவர். 

இந்தியாவின் மிகச் சிறந்த அறிஞர் அவர். மார்க்சியம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், இந்திய அரசியல் சாசனம்,  என்று அனைத்து துறைகளிலும் அவர் விற்பன்னர், 

மிகச் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,

தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரம்,

இன்சூரன்ஸ் ஊழியர்களின் நெருங்கிய தோழர். தன்னை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கௌரவ உறுப்பினர் என்று சொல்லியுள்ளார்.

எங்களுடைய ஊதிய உயர்வில் ஒரு முறை சிக்கல் ஏற்பட்ட போது அவரது தலையீடு, மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

அவருடைய உரையை பல முறை கேட்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவை அனைத்தும் புரிதலை அதிகரிக்கும் வாய்ப்பாகவே அமைந்தது.

வேலூருக்கு அவர் ஒரு முறை வந்த போது எங்கள் சங்கத்தின் சார்பில் அவருக்கு தோழர்களுடன் ஒரு வரவேற்பளித்தோம். அந்த நினைவு இன்று மனதில் ஓடிக் கொண்டே இருந்தது.

பாசிஸ சக்திகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தத்துவார்த்த பின்புலத்தை அமைத்துக் கொடுத்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

நேபாளத்தில் ஜனநாயகம் மலர்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை அந்நாட்டு நாடாளுமன்றமே பதிவு செய்துள்ளது.

அவரது இழப்பு இந்தியாவிற்கும் உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பெரும் இழப்பு.

செவ்வணக்கம் தோழர் சீத்தாரம் யெச்சூரி. . .



வேலூரில் தோழர் யெச்சூரிக்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் அளித்த வரவேற்பு கீழே . . .









No comments:

Post a Comment