Saturday, September 14, 2024

ஆட்டுக்காரன் மன்னிப்பு, மன்னிப்புக்கு அல்ல .. .

 


கோவை அன்னபூர்ணா ஹோட்டல் முதலாளி- ஆணவம் தலைக்கேறிய நிர்மலா அம்மையார்- நிர்மலா அம்மையாருக்கு சற்றும் குறையாத ஆணவம் கொண்ட வானதி அம்மையார்- மிகப் பெரும் கேடி ஆட்டுக்காரன் ஆகியோரை பாத்திரங்களாகக் கொண்ட ஜி.எஸ்.டி நாடகத்தை ஆராய்ந்து பார்த்தால் "நடந்தது பங்காளிச் சண்டையே" என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பிரிமியத்தின் மீதான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டம் பாலிசிதாரர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டது. அது அகற்றப்பட்டால் நிறுவனங்களும் பலனடையும் என்பது உபரிப் பலன்.

அன்னபூர்ணா சீனுவின் கோரிக்கையில் அப்படி நுகர்வோர் நலன் என்றெல்லாம் ஒன்றுமில்லை. வரியை அதிகம் வேண்டுமென்றால் போட்டுக்கோ, ஆனால் ஒரே சதவிகிதமாக போடு என்று கம்ப்யூட்டர் வசதிக்காக பேசியவர் அவர். வானதியம்மா சொன்னபடி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான அவர் ஏதோ உட்கட்சி பிரச்சினை காரணமாக  வானதியை கலாய்த்து விட்டார். அநேகமாக அவர் ஆட்டுக்காரன் கோஷ்டியாக இருக்கலாம்.

தான் கலாய்க்கப்பட்டது வைரலானதால் கடுப்பான வானதி அம்மையார் மன்னிப்பு கேட்க வைத்து அந்த காணொளி பரவுவதற்கும் ஏற்பாடு செய்து விட்டார்.

தன்னுடைய ஆளை மன்னிப்பு கேட்க வைத்து விட்டார்களே என்ற கடுப்பு இருந்தாலும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நிர்மலா அம்மையாருக்கு எதிராக வாய் திறக்கும் அளவிற்கு 56 இஞ்ச் மார்பனாக ஆட்டுக்காரன் இல்லாததால் வீடியோவை வெளியிட்டதற்கு மட்டும் மன்னிப்பு கேட்டு விட்டான். 



ஆக இந்த பிரச்சினையில் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நிர்மலா, வானதி அம்மையார்களும் பின்பு அன்னபூர்ணா சீனுவும் மனிதனாகவும்  மன்னிப்பு கேட்டு தங்களை பெரிய மனுசன் என்று அன்ன்பூர்ணா சீனுவும் ஆட்டுக்காரனும் காண்பித்துக் கொண்டார்கள், அவர்கள் அத்தனை பேரும் ஒரே அழுக்குக் குட்டையில் ஊறிய அழுகிய மட்டைகள் என்பதையும் . . .

No comments:

Post a Comment