Wednesday, September 11, 2024

குண்டர்கள் நீங்கள்தான் வாய்க்கொழுப்பு சூர்யா

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு செய்து கைதாகி இப்போதும் ஜாமீனில் உலவிக் கொண்டிருக்கும் எஸ்.ஜி.சூர்யா எனும் பாஜகவின் திமிர் பிடித்த ஆணவ சங்கி, கம்யூனிஸ்டுகள் மீது விஷம் கக்கியிருக்கிறான்.


தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவன தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சி.ஐ.டி.யு தலைமையில் சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் நலத்துறை, காவல்துறை ஆகியோரோடு கூட்டணி வைத்துக் கொண்டு சாம்சங் நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது.

முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் பாஜக கட்சியின் சூர்யா, போராடும் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் குண்டர்கள் என்று கொச்சைப் படுத்தியுள்ளான்.

அந்த நாலு கால் பிராணிக்கு குண்டர்கள் யாரென்று சொல்ல வேண்டியுள்ளது.

குஜராத்திலும் மும்பையிலும் கோவையிலும் முசாபர் நகரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று  அவர்களின் உடமைகளை அழித்த காவிக் கயவர்கள்தான் குண்டர்கள்.

நாடோடி இனச்சிறுமி ஆசிபாவை கோயிலுக்குள் வைத்து கூட்டு  பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அயோக்கியர்களும் அவர்களை விடுதலை செய்ய தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ க்களும் கட்சியினரும்தான் குண்டர்கள். 

மணிப்பூரில் சிறுபான்மை இன மக்களை கொன்று குவித்து பெண்களை அவமானப்படுத்திய உங்கள் ஆட்களும் முதலமைச்சரும்தான் குண்டர்கள். 

மாட்டின் பெயரில் தொடர்ந்து அப்பாவிகளை கொன்று கொண்டிருக்கும் பாஜக, சங் பரிவாரத்தை சேர்ந்தவர்கள்தான் குண்டர்கள்.

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் குடித்து கூத்தடித்து சென்று கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான் குண்டர்கள்.

திருமணம் மீறிய உறவுப் பிரச்சினைகளுக்காக பல சங்கிகள் கொல்லப் படும் சூழ்நிலையில் அதனை மதப் பிரச்சினையாக திசை திருப்புகிற ஆட்டுக்காரன், எச்.ராசா, எஸ்.ஆர்.சேகர், கரு,நாகராஜன், முருகானந்தங்கள், எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள்தான் குண்டர்கள்.

இந்த குண்டர்கள் கூட்டத்தின் தலைவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும்.

தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தையும் பாதுகாக்கும் காவல் அரணாக திகழ்வது இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களே. 

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சின்ன உதாரணம்.

தொழிற்சங்க இயக்கத்தை கொச்சைப்படுத்தும் கேவலமான ஜந்து சூர்யாவே உங்கள் காவிக்கூட்டம் சார்பில் பி.எம்.எஸ் என்று ஒரு சங்கம் வைத்துள்ளீர்களே, அந்த ஆணி தேவையற்றதுதானே! கலைத்து விடவும். 

No comments:

Post a Comment