Saturday, July 2, 2016

ராம்குமாரை விட கொடியவர்களின் கைது எப்போது?



காவ்ல்துறை ஒருவழியாக இன்ஃபோஸிஸ் ஊழியர் ஸ்வாதியை கொடூரமாக கொலை செய்த நெல்லை மாவட்டத்து ராம்குமாரை கைது செய்து விட்டார்கள். 

இந்த ஒரு வார காலத்தில் காவிக்கூட்டம் என்ன ஆட்டம் ஆடி விட்டது! 

இவர்களாகவே ஒரு பிலால் மாலிக்கை உருவாக்கி இஸ்லாமியர்தான் கொலைகாரன் என்று நிழல் விசாரணை நடத்தி பிரிவினையையும் கலவரத்தை உருவாக்கப் பார்த்தார்கள். 

காமெடி செய்து கொண்டிருந்த எஸ்.வி.சேகரும் வொய்.ஜி.மகேந்திரனும் வில்லனாக மாறினார்கள்.

காந்தியை கொலை செய்த காலத்திலிருந்து அடுத்தவர்கள் மீது பழி போட நினைக்கிற இழிவான சதிச் செயலை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

பொறுக்கிகள், கயவர்கள் என்று திராவிடர்களுக்கும் காம்ரேடுகளுக்கும் இவர்கள் அளித்த அடைமொழி ஆர்.எஸ்.எஸ் காவிக் கூட்டத்திற்கு மட்டுமே முழுமையாக பொருந்தும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது. 

நியாயமான கோரிக்கைகளுக்காக போராடுகிற அமைப்புக்களின் தலைவர்கள் மீது "கலவரத்தை தூண்ட சதி" என்ற பிரிவிலும் வழக்கு போடுவது தமிழக காவல்துறையின் வழக்கமான வேலை.

வதந்திகளைப் பரப்பி சமூக அமைதியை கெடுக்க நினைத்த சங் பரிவாரக் கும்பல் மீது தமிழக காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

கண்டெய்ணர் டீல் அரசு செய்யுமா?

பின் குறிப்பு : மத மாற்றம் செய்யச் சொன்னதால் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்று காவல்துறை அதிகாரிகள் சொன்னதாக நேற்று முன் தினம் சன் செய்திகள் சொன்னார்கள். அப்படி யாராவது அதிகாரிகள் நிஜமாக சொல்லியிருந்தால் அவர்கள் மீதும், அல்லது அச்செய்தி சன் டி.வி யின் கட்டுக்கதை என்றால் சன் டி.வி மீதும் போலீஸ் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சன் டி.வி மீது நடவடிக்கை  எடுப்பதற்கு வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது. 

 

3 comments:

  1. நிஜத்தைவிட வதந்திகள்தான் முக்கிய இடம்பெறுகின்றன என்பது வேதனையே.

    ReplyDelete
  2. பாவம் பிலால் மாலிக் என்னும் பெயர் உள்ளவர்களுக்கு இப்பதான் நிம்மதி. சகோதரி சுவாதியை ( Y. G. மகேந்திரன் S.V. சேகர் தூ (நன்றி விஜயகாந்த்) கூற்றுப்படி பிராமண பெண் ) கொலை செய்த அந்த வாலிபரை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அதே மாதிரி வெட்டி கொல்ல வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும். தயவுசெய்து அவரது பெற்றோரை வையாதீர்கள் அவர்கள் என்ன செய்வார்கள். இவன்செய்த தப்பிற்கு பெற்றோர் பொறுப்பல்ல. இந்த கொடுர சம்பவத்திலும் ஜாதி வெறியையும் மதவெறியையும் தூண்டிய சில கயவர்கள் (அரை டவுசர் காவிகள் ) தூ தூ (நன்றி விஜயகாந்த்) மனிதகுல விரோதிகள் ஆதாயம் அடைய முயற்சித்தார்கள். ஏனோ அவர்கள் இது தமிழ்நாடு பெரியார் பூமி என்பதை மறந்துவிட்டார்கள். பல நல்லஉள்ளம் கொண்ட இந்து சகோதரர்கள் இந்த கழிசடைகளின் கூற்றை ஏர்க்கவில்லை இந்த கழிசடைகளை கண்டிக்கவும் செய்தார்கள் நன்றி இந்து சகோதரர்களே. தனிமனிதன் செய்யும் எந்த கெட்ட செயலுக்கும் அந்த மதம் பொறுப்பாகாது அது இந்துமதமானாலும் சரி இஸ்லாமானாலும் சரி. உண்மை குற்றவாளி யை பிடித்த TN. போலீசுக்கு நன்றி. இதுபோல் அனைத்து சம்பவத்திலும் உண்மை குற்றவாளிகாளை பிடிக்கவேண்டும் அப்போதுதான் தமிழ்நாடு போலீசின் மதிப்பு அனைத்து மக்களிடத்தில் உயரும். நன்றி.

    M. செய்யது
    துபாய்

    ReplyDelete
  3. //கொலை செய்த அந்த வாலிபரை அதே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அதே மாதிரி வெட்டி கொல்ல வேண்டும். அப்போதுதான் மற்றவர்களுக்கு பயம் வரும்.//
    என்ன சார் இது! தமிழ் படங்கள் நிறைய பார்ப்பதினால் வரும் தாக்கமோ?

    ReplyDelete