Saturday, July 30, 2016

மழை வந்த நொடிகளுக்கு முன்பு







ஒரு கையில் தேநீர்க் குவளை,
மறு கையில் காமெராவாய் 
உருவெடுத்த அலைபேசி.

குளிர் காற்றும்
கரு மேகங்களும்
சின்னதாய் தோன்றிய
ஓளிக் கீற்றும் 
கண்ணிற்கும் நெஞ்சிற்கும்
இதமளித்த அந்த நொடிகள்.

மழை வந்த மறு கணம் 
அடைக்கலம் தேடி
ஓடி ஒதுங்கியதில் 
மாறிப் போனதே!

கடந்த வருட 
பெரு மழை தந்த
அச்சத்தின் மிச்சமோ!

பின் குறிப்பு : இன்று செய்யாறு சென்று திரும்பி வருகையில் எடுத்த புகைப்படங்கள். புகைப்படங்கள் எடுத்த அடுத்த நிமிடமே பெருமழை பிடித்துக் கொண்டது. 

1 comment:

  1. //பெரு மழை தந்த
    அச்சத்தின் மிச்சமோ!//

    அருமையான வரிகள்

    ReplyDelete