Wednesday, February 3, 2016

ஜட்ஜய்யா என்ன சாப்பிடுவாரு?



விவசாய நிலங்களை சீரழித்து எரிவாயு குழாய் அமைக்கலாம் என்று மெத்த படிச்ச நீதிபதிங்க சொல்லிட்டாங்க!

மீத்தேன் கேஸை எடுக்கலாம், விவசாயம் பாழா போகட்டும்னு நாளைக்கு சொன்னாலும் ஆச்சர்யப்பட ஒன்னுமில்லை.

வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி ஒட்டு மொத்த விவசாயமே அழிஞ்சு போனாலும் போகட்டும்னும் நாளை மறுநாள் சொல்வாங்க.

சாதாரண மனுசங்க பட்டினி கிடந்து செத்தா அவங்களுக்கு என்ன பிரச்சினை?

சரி எல்லா நிலத்தையும் தாரை வார்த்து விவசாயமே இல்லைனா ஜட்ஜய்யாங்க எல்லாம் எதை சாப்பிடுவாங்க? 

இல்லை அவங்களுக்கு வெளிநாட்டுலேந்து தனியா சாப்பாடு வந்திருமா?

இல்லை சோறு, ரொட்டிக்கு பதிலா நிலக்கரி,
காபி, டீ, தண்ணிக்கு பதிலா பெட்ரோல் குடிச்சு
எரிவாயுல மூச்சு விடுவாங்களா?

 

3 comments:

  1. Intha high court judgenga pudungara aani ellamae thevai illaatha aanithaan.

    ReplyDelete
  2. நீங்க ஒன்னு.அவிங்களுக்கு சாப்பாடு அமெரிக்காவில் இருந்து வரும்.

    --
    Jayakumar

    ReplyDelete