Monday, February 15, 2016

உங்கள் கையெழுத்து உதவி செய்யும்





பெண்களுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்களிப்பை உறுதி செய்யக் கூடிய மகளிர் மசோதா பல்லாண்டுகளாக கனவாக, கானல் நீராகவே காட்சியளிக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஆறாண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மக்களவையில் நிறைவேறாத காரணத்தால் அமலாகவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை ஆதரித்த கட்சிகள் மட்டுமே  ஆதரித்தால் கூட மக்களவையில் 95 % சதவிகித உறுப்பினர்கள் ஆதரவோடு மகளிர் மசோதா நிறைவேறும்.

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத மசோதாக்களை ஜனநாயக விரோதமாக அவசரச் சட்டங்கள் வாயிலாக அமலாக்குவதையே மரபாக மாற்றியுள்ள மோடி அரசு மகளிர் மசோதா என்பதை மறந்து விட்டது. பெண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டதுதான் பாஜக என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஜனநாயகம் உண்மையில் தழைத்தோங்க, பெண்களின் பங்கு அதிகரிப்பது மிகவும் முக்கியம். அதனால் மகளிர் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிற அமைப்பான எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், இது குறித்து பிரதமருக்கு ஆன்லைன் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளது. ஐந்து லட்சம் ஆன்லைன் கையெழுத்துக்களை திரட்டுவது என்ற இலக்கோடு நாடு முழுதும் இந்த இயக்கம் தொடங்கியுள்ளது.

இன்று மதியம் எங்கள் கோட்டத்தில் ஆன்லைன் கையெழுத்து இயக்கத்தை குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜி.லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) அவர்கள் துவக்கி வைத்தார்.

அந்த கையெழுத்து இயக்கத்திற்கான இணைப்பு கீழே உள்ளது. 


https://www.change.org/p/the-honourable-prime-minister-government-of-india-new-delhi-33-reservation-in-lok-sabha-and-state-legislative-bodies?recruiter=8214810&utm_source=share_petition&utm_medium


இந்த இணைப்பிற்குச் சென்று எங்களது இயக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்.
உங்கள் பெயர், மெயில் ஐ.டி, பின் கோட் ஆகியவற்றை மட்டும் அளித்தால் போதுமானது.

பெண்களின் உரிமைப் போராட்டம் வெற்றி பெற உங்களது கையெழுத்து நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.

No comments:

Post a Comment