Tuesday, February 16, 2016

எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம்






சியாச்சின் பனிச் சறிவில் வீர மரணம் அடைந்தவர்களில் வேலூர் அடுக்கம்பாறையைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலையும் ஒருவர்.

அவரது சடலம் இன்னும் வீடு வந்து வரவில்லை. ஆனால் அவர் எல்.ஐ.சி யில்  பாலிசி ஒன்று எடுத்துள்ளார் என்பதை அறிந்து அந்த விபரங்களை தேடி எடுத்து அந்த பாலிசிக்கான இறப்புரிமத் தொகையான ரூபாய்  9,36,000 க்கான காசோலையை அவரது வீட்டிற்கே எங்கள் கோட்டத்தின் முதுநிலைக் கோட்ட மேலாளர் திரு வொய்.வெங்கடேஸ்வர்லு, வணிக மேலாளர் திரு வி.தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று அவரது மனைவியிடம் அளித்துள்ளனர்.

அது போலவே மீட்கப்பட்டு இறந்து போன திரு ஹனுமந்தப்பா அவர்களின் பாலிசிக்கான தொகையும் அன்றைய தினமே எல்.ஐ.சி யின் தார்வாட் கோட்டத்தால் வழங்கப்பட்டு விட்டது.

மும்பைத் தாக்குதலில் உயிர் நீத்த காவல் அதிகாரி திரு ஹேமந்த் கர்கரே வின் பாலிசிக்கு எல்.ஐ.சி உடனே பணம் வழங்க, தீவிரவாதிகளோடு சண்டை போட்டால் உயிர் போகும் வாய்ப்புள்ளது என்று தெரிந்தே அவர் போனதால் பாலிசி பணம் கிடையாது என்று தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மறுத்ததையும் முன்பே பதிவு செய்துள்ளதை நினைவு படுத்துகிறேன்.

பாலிசிதாரர்களுக்குச் சேர வேண்டிய தொகையை உடனடியாக, முழுமையாக, நேர்மையாக வழங்குவது என்பது எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம்.

6 comments:

  1. ஆம் பொதுத்துறை நிறுவனங்களால் மட்டுமே சாத்தியம்.

    ReplyDelete
  2. LIC பொதுதுறை இன்ஸுரன்ஸ், தனியார் இன்ஸுரன்ஸ்சை விட சிறந்த முறையில் செயல்படுவது அவசியம் பலர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.

    ReplyDelete
  3. Yes. There may be few service issues. But as an organisation, the aim is not to loot the public. Let it be lic or bsnl etc..

    ReplyDelete
  4. When chennai city people were ravaged by unprecedented flood, only BSNL telephones were
    working,Nationalised banks ATMS were restored immediately when flood water receded, Metro
    bus services were operated. But no OLA TAXI, NO AIRTEL,AIRCEL,RELIANCE ETC.Only public
    sector were working in that crunchy situation. now modi govt wants to dilute public sector
    to Ambani adani and all other frauds like Vijay malliah whose Kingfisher airline looted
    the public money

    ReplyDelete
  5. எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம்..................It is True....and proven many times....

    ReplyDelete