Wednesday, February 17, 2016

ஒற்றைப் படத்தில் அத்தனையும்

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்  நடைபெற்று வரும் ஜனநாயக விரோத சம்பவங்கள்,

காவிக்கூட்டத்தின் மாணவ அடியாட்கள் படையான ஏ.பி.வி.பி கூட்டத்தின் தில்லுமுல்லுகள், அந்த ரௌடிக் கூட்டத்தை அனைத்து பல்கலைக் கழகங்களிலும் போஷாக்கு கொடுத்து வளர்க்கும் முயற்சிகள்,

நீதிமன்ற வளாகத்திற்குள் மாணவர்கள் மீது நடந்த தாக்குதல்கள்,

மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல்,

கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் யெச்சூரி மீதான கொலை மிரட்டல், 

நான் என்றும் எடுபிடியே என்று செயல்படும் டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி,

அறிவிலி ராஜ்நாத் சிங்கின் அறிக்கைகள், வாயில் கொழுக்கட்டை அடைத்துக் கொண்டுள்ள மோடி.

இவை அத்தனையையும் நேற்று ஹிந்து பத்திரிக்கையில் வந்த ஒற்றை கார்ட்டூன் விளக்குகிறது.



எல்லாவற்றையும் திசை திருப்புகிறார் மோடி என்பது சரியே. அவரது தோல்விகளில் இருந்து மட்டும் கவனத்தை திருப்புவதாக நான் நினைக்கவில்லை.

ஏதோ மிகப் பெரிய திருட்டுத்தனத்தை செய்ய மோடி அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். எதையெல்லாம் யாருக்கெல்லாம் விற்கப் போகிறதோ?
 

No comments:

Post a Comment