Saturday, February 27, 2016

எழுதவே அசிங்கமாய் இருக்கிறது.





இந்த பதிவை எழுத வேண்டுமா என்று நேற்று முதல் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அசிங்கத்தை அசிங்கம் என்று சொல்லத்தான் வேண்டுமல்லவா!

வீரப்பனை விட பெரிய மீசை வைத்த இந்த மனிதன் ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பெயர் கியான்தேவ். ராவணன் வேஷம் போட்டே சீட் வாங்கியவராம்.

இந்த மனிதன் பெரிய புள்ளியியல் நிபுணர். அவரது கண்டுபிடிப்பு என்ன தெரியுமா?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒவ்வொரு நாளும் ஐம்பதாயிரம் எலும்புத்துண்டுகள், பத்தாயிரம் புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், நான்காயிரம் பீடித்துண்டுகள், மூவாயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், பயன்படுத்தப்பட்ட கருக்கலைப்பு ஊசிகள் அறுநூறு ஆகியவை கிடக்கிறதாம். இரவு எட்டு மணிக்கு மேல் மாணவர்களும் மாணவிகளும் பங்கேற்கின்ற நிர்வாண நடனம் ஒவ்வொரு நாளும் நடைபெறுமாம்.

உலகப் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தை எவ்வளவு கீழ்த்தரமாக ஒரு நைட் கிளப் போல அந்த மனிதன் சொல்லியுள்ளான் என்றால் அவனது புத்தி  எவ்வளவு மட்டமானது என்பதைப் பாருங்கள்.

தங்களின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் உறுதியோடு போராடுகிற ஜே.என்.யு மாணவர்களை இழிவு படுத்த எந்த அளவிற்கு கீழிறங்க முடியுமோ, அந்த அளவிற்கு காவிப்படை சென்று கொண்டிருக்கிறது.

தீவிரவாதிகள், தேசத்துரோகிகள் ஆகிய வசை பாடல்களுக்கு மாணவர்கள் அடி பணியாமல் தொடர்ந்து போராடி வருவதால் அவர்களை ஒழுக்கமற்றவர்களாக சித்தரிக்கிற அடுத்த சதியை கியான்தேவ் மூலமாக துவக்கியுள்ளார்கள்.

பொய்ப் பிரச்சாரம் செய்வதில் கோயபல்ஸ் எல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்

1 comment:

  1. இப்படி எவ்வளவு நடந்தாலும் பெரிய மனிதராக காட்டிகொள்ளும் சில மைந்தர்கள் இதில் என்ன தவறு என்று கேட்பார்கள். அவர்களுக்கு 'மதம்' பெரிது மனிதனை விட. அவலம்.

    ReplyDelete