Tuesday, February 23, 2016

மோடிக் கூட்டம் எங்கே செல்லும்?





போலி தேச பக்த களவாணிகள் என்ற நேற்றைய பதிவை “உண்மையான தேசத் துரோகிகளான காவிக்கூட்டம்தான் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” என்று முடித்திருந்தேன்.

அப்படி இந்த தேசத்துரோகிகள் இந்தியாவை விட்டு வெளியேற்றினால் அவர்களால் எந்த நாட்டிற்கு செல்ல முடியும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன்.

இன்று நாடு நாடாக மோடி அலைந்து கொண்டிருந்தாலும் அது இந்தியாவின் பிரதமர் என்ற அடிப்படையில்தான். உலகின் முக்கியமான ஜனநாயக நாட்டின் பிரதமர் என்ற முறையில்தான் அவருக்கு இன்று மரியாதை கிடைக்கிறது. தங்கள் நாட்டிற்கு வரக் கூடாது என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அவருக்கு விசா அளிக்க மறுத்தது நினைவுக்கு வருகிறது.

இப்போது என்னதான் பாரக் ஒபாமாவோடு நெருக்கமாக இருப்பதாக மோடி காண்பித்துக் கொண்டாலும் பிரதமர் பதவியில் இல்லாத மோடியை அமெரிக்கா வர ஒபாமா ஒப்புக் கொள்வாரா? அமெரிக்கக் கம்பெனிகள் இந்தியாவில் கொள்ளையடிக்க மோடியின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதற்காக இப்போது வேண்டுமானால் அவர்கள் சகித்துக் கொள்ளலாம். ஆதாயமில்லாத போது மோடியையும் அவர் கூட்டத்தையும் யார் சகித்துக் கொள்வார்கள்?

இதே நிலைதான் எல்லா நாடுகளிலும் ஏற்படும்?

அப்படியென்றால் காவிக்கூட்டத்தின் நிலை என்ன?

மாட்டுக்கறி தின்ன விரும்புவர்களை அரபிக்கடலில் மூழ்கச் சொல்லி ஒரு மந்திரி சொன்னாரே, அது போல இவர்களும் அப்படி கடலில்தான் மூழ்க வேண்டியிருக்குமோ?

அப்படியெல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

இதிகாச, புராண கற்பனைக்கதைகள் ஆகியவற்றை அறிவியல் என்று நிலை நிறுத்துபவர்கள் அல்லவா இவர்கள்!

பிளாஸ்டிக் சர்ஜரிக்கு பிள்ளையார் பிறந்ததையும்
டி.என்.ஏ ஆராய்ச்சிக்கு கௌரவர்கள் பிறந்த நிகழ்வையும்
லவ, குசன் பிறப்பை க்ளோனிங் என்றும்
பிரம்மாஸ்திரம்தான் அணுகுண்டு ஏவுகணை என்றும்
புஷ்பக விமானத்தை போயிங் தொழில் நுட்பம் என்றும்

தாங்கள் நம்புவது மட்டுமல்லாமல் நம்மையும் நம்பச் சொல்கிற அதிமேதாவி அறிவியல் அறிஞர்களுக்கு என்ன பிரச்சினை இருக்க முடியும்?

இந்திரனால் திரிசங்கு மகாராஜாவிற்கு சொர்க்கம் மறுக்கப்பட்ட போது எப்படி விஸ்வாமித்திர முனிவரால் ஒரு புதிய சொர்க்கத்தை திரிசங்கு விற்காக உருவாக்க முடிந்ததோ

அது போல காவிக் கூட்டமும் தங்களது சாமியார்களின் தவ வலிமையால் அந்தரத்தில் ஒரு நாட்டை உருவாக்கி விட மாட்டார்களா என்ன?

அந்த அற்புதத்தை நாம் பார்ப்பதற்காகவாவது இவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிட வேண்டும்.

பின் குறிப்பு : மேலே உள்ள படம், நடிகர் திலகம் சிவாஜி நடித்த ராஜரிஷி படத்தில் வரும் திரிசங்கு சொர்க்கத்தின் செட்டிங். நாளை ஒரு பதிவு இது பற்றி இன்னும் விரிவாக

No comments:

Post a Comment