Friday, February 26, 2016

குழந்தையைக் கொன்ற “அம்மா”




இது தமிழ்நாட்டு “அம்மா” இல்லை. மத்தியரசு “அம்மா”

காவிப்படை அளித்த நிர்ப்பந்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோஹித் வெமுலா குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் வரும் போது மனித வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்மிர்தி இராணி, ரோஹித் வெமுலாவை “குழந்தை” என்றே குறிப்பிட்டு அந்த குழந்தையின் சடலத்தை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக சாடியுள்ளார். ரோஹித்தை குழந்தை என்று சொல்லியுள்ள ஸ்மிர்தி இராணியின் தாயுள்ளத்தை பாருங்கள் என்று சில காவி டவுசர்கள் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். ஸ்டிக்கர் ஒட்டி பேனர் கட்டாத அளவிற்கு பாராட்டியுள்ளனர்.

ரோஹித் வெமுலாவையும் மற்ற மாணவர்களையும் சஸ்பெண்ட் செய்ய யார் காரணம்?

அவர்களைப் போன்ற ஜாதிய, தீவிரவாத, தேச விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது யார்?

உதவித்தொகையை நிறுத்தி வைக்க, விடுதிகளிலிருந்து வெளியேற்ற, துணைவேந்தருக்கு தொடர்ந்து நிர்ப்பந்தம் கொடுத்தது யார்?

மின்னஞ்சல் மீது மின்னஞ்சல் அனுப்பி ரோஹித் வெமுலா, தூக்குக்கயிற்றை நாட காரணமாக இருந்தது யார்?

இப்போது ரோஹித் வெமுலாவை குழந்தை என்று சொல்லி பாசத்தை பொழிகிற இதே ஸ்மிர்தி இராணிதானே?

குழந்தையைக் கொன்று விட்டு இப்போது போட்டுள்ள தாய் வேடத்தில் அவர் காண்பிக்கிற சிறப்பான நடிப்பை அவர் திரைப்படங்களில் கூட வெளிப்படுத்தியிருப்பாரா என்று தெரியவில்லை. 



குழந்தையை பார்க்க மருத்துவர்களை அனுமதிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் சொன்ன பொய்களை ஹைதராபாத் பல்கலைக்கழக மருத்துவரின் அறிக்கை தோலுரித்து விட்டது. இப்படிப்பட்ட பொய்யர்களை இந்தியா இன்னும் அமைச்சர்களாக நீடிக்க அனுமதிக்கலாமா?


1 comment:

  1. பொய் சொல்வது என்பது, அரசியல்வாதியாவதற்கான அரிச்சுவடி என்பதை இன்னமும் அறியாதவராக இருக்கிறீர்களே !.

    ReplyDelete