Friday, February 26, 2016

அலகாபாத்திலும் காவி வக்கீல்கள் அராஜகம்







அலகாபாத் நகரின் தொழிற்சங்கங்கள், மற்றும் பல முற்போக்கு சக்திகள் இணைந்து நேற்று ஒரு பேரணி ஒன்றை சங் பரிவாரத்தின் பிரிவினைச் சதிகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருந்தார்கள். மக்களை ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மோத வைக்கிற இழி செயல்களையும் அந்த முயற்சிகளுக்கு மோடியின் அரசு எவ்வாறு பக்கபலமாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் விதத்தில் ஜே.என்.யு மற்றும் ரோஹித் வெமுலா பிரச்சினையை முன்னிருத்தி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப் போய்க் கொண்டிருந்த போது வக்கீல்களாக தொழில் புரியும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவோம் என்றெல்லாம் அசிங்கமாக பேசியுள்ளார்கள்.

.பல பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் எங்களது அலகாபாத் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் அவினாஷ் மிஸ்ரா அவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் காவல் நிலையத்தில் குழுமிய பின்னரே புகார் பதிவு செய்யப்பட்டது. அடையாளம் தெரியாதவர்கள் என்று முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.  தோழர் அவினாஷ் மிஸ்ரா மீது தாக்குதல் நடத்திய ரௌடிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வெறியாட்டம் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.

காவிக் கூட்டத்தின் சகிப்பின்மைக்கு இந்த சம்பவம் இன்னும் ஒரு எடுத்துக்காட்டு. கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத அராஜகவாதிகள் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்த நினைக்கிறார்கள். அதன் மூலம் தங்களது அசிங்கங்களை மறைக்க முயல்கிறார்கள்.

ஆனால் கொள்கை வழி நிற்கிற முற்போக்கு சக்திகளை எந்த அச்சுறுத்தல் மூலமாகவும் பணிய வைக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது குண்டாந்தடிகளை விட, அரிவாள், துப்பாக்கிகளை விட எங்களின் கொள்கைகளுக்கும் உறுதியான வர்க்க உணர்விற்கும் வலிமை அதிகம்.

No comments:

Post a Comment