Sunday, August 8, 2021

மணிரத்னத்தை ஆதரிக்க வைப்பார்களோ?



ஒரு சார்புத் தன்மையோடு மட்டும் எடுத்த ரோஜா படம் பார்த்த போது மணிரத்தினத்தின் மீது ஒரு எரிச்சல் வந்தது. பம்பாய் படத்தில் நடுநிலை என்ற பெயரில் செய்து கொண்டிருந்த சில சமரசங்கள் அந்த எரிச்சலை அதிகரிக்க வைத்ததால் அதற்குப் பிறகு மணிரத்தினத்தின் படங்களை பார்ப்பதில்லை.

 பொன்னியின் செல்வன் படத்தை அவர் இயக்கப் போகிறார் என்ற சேய்தி வந்த போது உருவான அச்சம் அதற்கு புளிச்ச மாவு ஆஜான் வசனம் எழுதப் போகிறார் என்ற செய்தி அந்த அச்சத்தை பல மடங்கு அதிகரித்து விட்டது. வாசிப்பின் துவக்க காலத்தில் மிகவும் பிடித்த, பல முறை படித்த நூலாக “பொன்னியின் செல்வன்” இருந்த போதிலும் மணிரத்தினம்-ஜெயமோகன் காம்போவிற்காகவே அத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்கக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன்.

 ஆனால் மத்யமர்  குழுவில் ஒரு பதிவையும் அதற்கான சில பின்னூட்டங்களை பார்த்த போது “நம்மையும் இவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வைத்து விடுவார்கள் போலிருக்கே!” என்று தோன்றியது.













 அப்படி விஷம் கக்க என்ன காரணம் என்று பார்த்தால் இது வரை வெளியான ஸ்டில்களில் இந்து மதக்குறியீடுகள் இல்லை என்று எல்லோரும் புலம்பியுள்ளார்கள். ஒரு புலிப்படமும் வாளும் சேர்ந்த ஒரு போஸ்டர் தவிர முக்கிய பாத்திரங்கள் அடங்கிய இன்னொரு போஸ்டர். விகடன் ஒரு ஓவியம்  போட்டிருந்தது. இவை எவற்றிலும் காலி நெற்றி இல்லவே இல்லை. பிறகு என்ன பிரச்சினை? ராஜராஜன் முகத்தில் திருநூறு இல்லையாம்! கல்கி  எழுதிய பொன்னியின் செல்வனுக்கு மணியம் படம் வரைந்த போதே விபூதியெல்லாம் இல்லை. அது சிவாஜி நடித்த ராஜராஜ சோழன் படத்தில் போட்டு விட்டிருந்தார்கள். ஆனால் இந்த ஸ்டில்களில் எல்லாம் விபூதி நன்றாகவே தெரிகிறது.

 




பதிவு எழுதிய புண்ணியவானும் சரி, பின்னூட்டம் போட்ட புத்திசாலிகளும் சரி, எதையும் பார்க்காமலே எழுதியுள்ளார்கள் என்பது மட்டும் தெரிகிறது. அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சங்கிகள் என்பவர்கள் அடிமுட்டாள்களும் அயோக்கியர்களுமானவர்கள்.

 

நாம் தமிழர் கட்சியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் குத்தகை எடுத்துள்ளார்கள். அது போல மதச் சான்றிதழ் வழங்கும் குத்தகையை சங்கிகள் எடுத்துள்ளார்கள். இவர்களுக்கு பிடிக்காதவர்களை இவர்களே மதம் மாற்றி விடுவார்கள்.

 

பம்பாய் படத்தில் “காவி சார் நிலை” எடுத்ததுதான் மணிரத்தினத்தை பிடிக்காமல் போனதற்கான காரணம். ஆனால் காவிகளே இப்போது அவருக்கு எதிராக விஷத்தைக் கக்குகிறார்கள்.

 

ஏன்?

 

சில மாதங்கள் முன்பாக கருத்துரிமையை நசுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து  சில படைப்பாளிகள் கையெழுத்திட்டு மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதிலே கையெழுத்திட்டவர்களில் மணிரத்தினமும் ஒருவர்.

 

மோடியை கண்டிக்கலாமா?

 

மோடியை கண்டிப்பவர்கள் தேச விரோதிகள், ஜிஹாதிகள், மிஷனரிகள், அர்பன் நக்ஸலைட்டுகள்.

 

இதிலே மணிரத்தினத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள முத்திரை மிஷனரி. அவ்வளவுதான்.

 

இப்போதே இப்படி! இவர்கள் மொண்டு வந்துள்ள மசோதாவை நிறைவேற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.

 

முன்னொரு காலத்து “நியூஸ் ரீல்” போலத்தான் திரைப்படமே இருக்கும்.

 

3 comments:

  1. வரட்டும் பார்க்கலாம். இப்போதே விமர்சனம் எழுதி படத்திற்கு விளம்பரங்கள் தர வேண்டாம் அன்பரே. அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete