Friday, August 20, 2021

பொய்(தின)மலர் மீது நடவடிக்கை எடு

 


A 1 போட்ட ஒற்றைக் கையெழுத்தில் 3,25,000 அரசு ஊழியர்கள் வேலை இழந்தார்கள். ஆயிரக்கணக்கான சாலைப்பணியாளர்களையும் மக்கள் நலப் பணியாளர்களையும் அதே அம்மையார் பணி நீக்கம் செய்து நடுத்தெருவில் நிறுத்தினார். உலகப் பொருளாதார நெருக்கடியில் எண்ணற்ற ஊழியர்கள் பணி இழந்தார்கள். கணிணித் துறையிலும் ஆட்குறைப்பு நடந்து கொண்டே இருக்கிறது. மோடியின் மூன்று மூட நடவடிக்கைகளால் கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்விழந்தனர். சிலர் உயிரையும் இழந்தனர். 



அப்போதெல்லாம் அவர்களைப் பற்றி கவலைப்படாத ஒரு நாளிதழ், இன்னும் சொல்லப்போனால் உற்சாகத்தில் டமீல், டுமீல், பணால் என்றெல்லாம் தலைப்பு கொடுத்த ஒரு பொய் மலர், இப்போது அர்ச்சகர்களுக்காக, அதிலும் யாரும் பணி நீக்கம் செய்யப்படவில்லை, அப்படி நடக்காது என்று துறை அமைச்சரும் முதல்வரும் உறுதிபட கூறிய பின்பும் இப்படி ஒரு சிண்டுமுடிப்பு வேலை செய்கிறது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிற சங்கி ஜ்ந்துக்களை வெறியேற்றி கலவரத்தைத் தூண்டும் முயற்சியன்றி வேறில்லை. 

சமூக அமைதியை குலைக்கும் தின மலர் மீது தமிழ்நாட்டு அரசே, நடவடிக்கை எடு.

No comments:

Post a Comment