Tuesday, August 10, 2021

உடல் வலி போக்கும் தந்த உருண்டை

 உடல் வலி போக்கும் தந்த உருண்டை

 


இப்படி ஒரு உருண்டை செய்து ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டால் உடல் வலி வராது என்றொரு இணையப்பக்கத்தில் பார்த்தேன்.

 சபலம் யாரை விட்டது?

 ஒரு டம்ப்ளர்  முழு உளுந்து, அரை டம்பளர் அளவில் வேர்கடலை, பிறகு அதே அளவில் பொட்டுக்கடலை, கால் டம்பளர் பச்சை அரிசி, ஐந்தாறு பாதாம் பருப்பு, ஏழெட்டு ஏலக்காய்.



 இவை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக மிக்ஸியில் பொடி செய்து ஒன்றரை டம்ப்ளர் அளவில் வெல்லமும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக ஓட விட்டு பிறகு நெய்யை சூடு செய்து ஊற்றி கலந்து உருண்டை பிடித்தால் “உடல் வலி போக்கும் உருண்டை” தயார்.

 இதை எழுதுவது சுலபமாக இருக்கிறது.

 ஆனால்  ஒரு பெரிய சொதப்பல் செய்து விட்டேன்.


 பருப்பு, கடலை வகையறாக்களை மிக்ஸியில் பொடி செய்து பார்த்த போது நைஸாக இருப்பது போலவே தோன்றியதால் வெல்லத்தையும் சேர்த்து பொடி செய்து விட்டேன்.

 ஆனால் சரியாக அரைபடவில்லை. கொர கொர என்றே இருந்தது.

 

சலித்து சலித்து மீண்டும் அரைத்து

சலித்து சலித்து மீண்டும் அரைத்து

சலித்து சலித்து மீண்டும் அரைத்து

 


கையிலும் தோளிலும்தான் வலி வந்தது.

உருண்டை செய்வதற்கு முக்கால் அளவுதான் தேறியது. அதை வைத்து உருண்டையும் பிடித்தாகி விட்டது. வலி போகுமா?

 பொறுத்திருந்து பார்க்கலாம் . . . .

 மீதமுள்ள கால் பங்கு ????

 


அது இன்னும் பெரிய சோகக் கதை, சோதனைக்கதை. மிகப் பெரிய சொதப்பல் கதை

 

நாளை அந்த விக்கிரமாதித்தன் கதை . . .

 

No comments:

Post a Comment